பாகிஸ்தானில் அந்தரத்தில் தொங்கும் கேபிள் கார் - இரண்டு சிறுவர்கள் மீட்பு
பாகிஸ்தானில் அந்தரங்கத்தில் தொங்கும் கேபிள் காரிலிருந்து இரண்டு சிறுவர்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் இரவுநேரமாகியதால் மீட்பு நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பாகிஸ்தானின் வடமேற்கில் உள்ள கைபர் பக்டுன்கா பிராந்தியம் கரடுமுரடான மலைகளும், ஆழமான பள்ளத்தாக்குகளும், நதிகளும், சமநிலைகளும் நிறைந்த ஒரு பகுதி ஆகும். இங்குள்ள பள்ளத்தாக்குகளை கடக்க பாலங்கள் அமைக்க முடியாததால், மக்கள் ஒரு மலையிலிருந்து எதிரே உள்ள மலைக்கு அந்தரத்தில் கேபிள் கார் எனப்படும் ஒரு கயிற்றின் மூலமாக இயக்கப்படும் சிறு வாகனத்தில் அமர்ந்து பயணம் செய்வது வழக்கம்.
கேபிள் கார் மூலமாக

சிறுவர்கள் பாடசாலைக்கு செல்ல கேபிள் கார் மூலமாக ஒரு மலைப்பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு செல்வது வழக்கம்.
திடீரென அறுந்த கயிறு

இதன்படி இன்று காலை 07:00 மணியளவில் ஆறு சிறுவர்கள், இரண்டு பெரியவர்கள் என மொத்தம் எட்டு பேர் ஒரு கேபிள் காரில் பயணித்தனர். தரையில் இருந்து சுமார் 1200 அடிக்கு மேலே அது செல்லும் போது கயிறு திடீரென அறுந்தது.
இதனையடுத்து இந்த கார் அதில் உள்ள பயணிகளுடன் அந்தரத்தில் ஊசலாட தொடங்கியது.
இரண்டு சிறுவர்கள் மீட்பு

இந்த நிலையில் குறித்த கேபிள் காரிலிருந்து இன்றுமாலை வரை இரண்டு சிறுவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.இரவு நேரமாகையால் மீட்பு பணி இடைநிறுத்தப்பட்டுள்ளது.