யாழில் இரு சிறுமிகள் சடலங்களாக மீட்பு...! அதிர்ச்சியுற்ற தாய்க்கு நேர்ந்த கதி
புதிய இணைப்பு
யாழ்ப்பாணம் (jaffna) – ஊர்காவற்துறையில் குளம் ஒன்றினுள் துவிச்சக்கர வண்டியுடன் விழுந்து இரு சிறுமிகள் நேற்றைய தினம் (1.5.2024) இரவு உயிரிழந்த, சம்பவத்தை கேட்டு அதிர்ச்சியுற்று மயக்கமடைந்த தாய் ஊர்காவற்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஊர்காவற்துறை நாரந்தனை தெற்கு சூரியவத்தை பகுதியை சேர்ந்த 11 வயதுடைய நிரஞ்சன் நிதுசா மற்றும் 5 வயதுடைய நிரஞ்சன் அனுஷ்கா ஆகிய இரு சிறுமிகளே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
பால் வாங்க சென்ற இருவரையும் காணவில்லை என குடும்பத்தினர் தேடிய போது கடைக்கு சற்று தொலைவில் உள்ள குளத்திற்குள் இருவரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
முதலாம் இணைப்பு
யாழ்ப்பாணத்தில் (Jaffna) சிறிய நீர் நிலை ஒன்றில் இருந்து இரண்டு சிறுவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவமானது இன்று (1) இரவு 8 மணியளவில், ஊர்காவற்துறை காவல்துறை பிரிவிற்குட்பட்ட, சின்னமடு பகுதியில் இடம்பெற்றுள்ளது.
11 வயதுடைய நிரோசன் விதுசா, 5 வயதுடைய நிரஞ்சன் அனுஷ்கா என்ற இரண்டு சிறுவர்களுமே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
சிறுவர்களின் சடலங்கள் மீட்பு
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த சிறுவர்கள் துவிச்சக்கர வண்டியில் கடைக்கு சென்றுள்ளனர்.
இந்நிலையில், கடைக்கு சென்ற சிறுவர்களை காணவில்லை என தேடிய உறவினர்கள் வீதிக்கு அருகேயுள்ள குட்டையில் அவர்கள் இருவரது சடலங்கள் காணப்பட்டதை அவதானித்துள்ளனர்.
இருவரும் துவிச்சக்கர வண்டியுடன் தவறுதலாக குட்டையில் விழுந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
மேலதிக விசாரணை
இந்நிலையில், இருவரது சடலங்களும் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு (Teaching Hospital Jaffna) அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை ஊர்காவற்துறை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![](https://cdn.ibcstack.com/bucket/63039cb22bd37.webp)
![இன ஒடுக்குமுறையின் குரூரத்தை உணர்த்தும் யாழ் நூலக எரிப்பு](https://cdn.ibcstack.com/article/f1a6c672-7ccc-4701-aa51-2feed611a0ca/24-66575aaac59ee-md.webp)
இன ஒடுக்குமுறையின் குரூரத்தை உணர்த்தும் யாழ் நூலக எரிப்பு 3 நாட்கள் முன்
![ஒரு தேசிய இனத்திற்கு காணி அதிகாரம் இல்லை என்றால்...](https://cdn.ibcstack.com/article/bcc055c6-47af-4b81-8f8c-7fd350b3ab96/24-6654ba1e46217-sm.webp)
ஒரு தேசிய இனத்திற்கு காணி அதிகாரம் இல்லை என்றால்...
5 நாட்கள் முன்![தலைவர் பிரபாகரனிடம் ராஜீவ்காந்தி சொன்ன இரகசியம் ..!](https://cdn.ibcstack.com/article/bcd30621-18f4-4f12-a0ff-e056a608a8c5/24-664f978248ac7-sm.webp)