தமிழர் பகுதியில் மீட்கப்பட்ட சடலம் - தீவிர விசாரணையில் காவல்துறையினர்
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
By pavan
முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பகுதியில் வயோதிபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மாந்தை கிழக்கு மூன்று முறிப்பு பகுதியில் நேற்று(04) மாலை இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சடலம் வயல்வெளி வீதி ஓரத்தில் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில், வவுனியா - முள்ளிக்குளம் பகுதியைச் சேர்ந்த 71 வயதான ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது.
மேலதிக விசாரணை

கால்நடைகளை மேய்ப்பதற்காக சென்றவர்களினால் குறித்த சடலம் அடையாளம் காணப்பட்டு நட்டாங்கண்டல் காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நட்டாங்கண்டல் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி