சடலமாக மீட்கப்பட்ட இளம்தாய்! ஒரு வயது குழந்தை மாயம்
லிந்துலை காவல்துறை பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை லோகி தோட்டத்தைச் சேர்ந்த இளம் தாயொருவர் தெப்பக்குளத்தில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
லோகி தோட்டத்தைச் சேர்ந்த மகாமணி தயானி (வயது - 26) என்ற இளம் தாயொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அவரின் சடலம் இன்று (23) காலை தெப்பக்குளத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளது. எனினும் அவரின் ஒரு வயது குழந்தைக்கு என்ன நடந்தது என்பது இன்னும் தெரியாமலேயே உள்ளது.
தனது குழந்தையுடன் அவர் குளத்தில் குதித்தாரா அல்லது என்ன நடந்தது என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
ஐந்து பக்கத்தில் கடிதம்

ஐந்து பக்கத்தில் கடிதமொன்றையும் அவர் எழுதி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த கடிதம் மற்றும் திருமணப் பதிவு அட்டை, தேசிய அடையாள அட்டை என்பவற்றை தெப்பக்குளத்துக்கு அருகில் வைத்துவிட்டே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
மேலதிக விசாரணை

தன்னையும் தனது குழந்தையையும் , கணவரும் அவரின் குடும்பத்தாரும் துன்புறுத்தினர் என அக்கடிதத்தில் எழுதப்பட்டுள்ளது என காவல்துறையினர் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளைக் காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.