தமிழர் தாயகத்திற்கு பேரிழப்பான வைத்தியர் சுதர்சனின் மரணம்
பலருடைய உயிரை காப்பாற்றிய ஒரு மனித நேயம் கொண்ட யாழ்ப்பாணம் போதனாவைத்திய சாலையின் சத்திர சிகிச்சை நிபுணர் வைத்தியர் சுதர்சனின் இழப்பு ஈடு செய்யமுடியாது என தமிழ் பொதுவேட்பாளராகப் போட்டியிட்ட பாக்கியசெல்வம் அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.
இவருடை இழப்பு ஈடு செய்யமுடியாது என்று தனது இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
ஈடு செய்யப்பட முடியாத பேரிழப்பு: சத்திர சிகிச்சை நிபுணர் சுதர்சன் திடீர் மறைவுக்கு கஜேந்திரன் இரங்கல்
அமரத்துவம் அடைந்த வைத்தியர்
''மருத்துவர்களாக பலர் உள்ளனர் ஆனால் மனிதநேயம், நோயாளர்களுடன் பழகும் விதம் அவர்களுடன் அன்பாக பேசி மக்கள் மனதை கவர்ந்தவர்கள் ஒரு சிலர் மட்டுமே உள்ளனர்.

அதில் அமரத்துவம் அடைந்த இந்த வைத்தியரின் சேவை என்பது இறைவனால் கொடுக்கப்பட்ட கொடையாகவே பார்க்கப்பட்டது.
நல்லவர்களின் அற்பணிப்பான சேவைகளை தொடர்ந்து மக்களுக்கு வழங்கவிடாமல் ஏன் இறைவன் இடையில் அவரின் உயிரை எடுத்தார் என்பதை நினைக்கும்போது மனம் பரிதவிக்கிறது.
பலருக்கு வைத்திய ஆரோக்கிய ஆலோசனைகளை வழங்கிய மருத்துவர் அவருடைய உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவில்லை என்று சொல்வதா?
இல்லை இதுதான் விதி என்று என்று கூறி மனதை தேற்றுவதா தெரியவில்லை. அன்னாரின் ஆத்மா சாந்திபெற பிரார்த்திப்போம்" கூறியுள்ளார்.
செஞ்சோலையில் 53 மாணவிகளை பலியெடுத்த கொடூரத்தை மறக்கத்தான் முடியுமா? 12 மணி நேரம் முன்