தந்தையை கொலை செய்த மகனுக்கு 9 வருடங்களின் பின்னர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு
son
court
father murder
death-penalty
By Sumithiran
தந்தையை கொலை செய்த நபர் ஒருவருக்கு ஒன்பது ஆண்டுகளின் பின்னர், குளியாப்பிட்டிய மேல் நீதிமன்றம் இன்று மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
சொத்து பிரச்சினையின் அடிப்படையில் குற்றவாளி கடந்த 2012 ஆம் ஆண்டு பெப்ரவரி 19 ஆம் திகதி தனது தந்தையை தாக்கி கொலை செய்துள்ளார்.
இந்த வழக்கு விசாரணை தொடர்பான தீர்ப்பு இன்று வழங்கப்பட்டதுடன் குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து குளியாப்பிட்டிய மேல் நீதிமன்ற நீதிபதி ஜகத் ஏ. கஹந்தகம தீர்ப்பளித்துள்ளார்.
குற்றவாளி இந்த கொலையை செய்யும் போது அவரது வயது 60 என்பதுடன் கொல்லப்பட்ட தந்தையின் வயது 90 என தெரிவிக்கப்பட்டுள்ளது.