கோட்டாபய மற்றும் மகிந்த இணைந்து எடுத்துள்ள முடிவு
ஸ்ரீலங்கா அமைச்சரவையில் இன்னும் சில தினங்களில் மாற்றம் ஏற்படப் போவதாக மீண்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு இராஜாங்க அமைச்சுப் பதவியொன்று அளிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஸ்ரீலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும்(gottapaya Rajapaksa), ஸ்ரீலங்கா பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும்(Mahinda Rajapaksa) அமைச்சரவையில் மாற்றத்தை செய்வதற்கு இணங்கியிருப்பதாக கொழும்பிலிருந்து வெளியாகும் நாளிதழ் ஒன்று தெரிவித்துள்ளது.
அதன்படி, இந்த அமைச்சரவை மாற்றத்தில், கிழக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்துவம் செய்கின்ற முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு இராஜாங்க அமைச்சுப் பதவி அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அமைச்சுப் பொறுப்பை ஏற்பதற்கு சம்பந்தப்பட்ட முஸ்லிம் உறுப்பினர் தீர்மானித்திருப்பதாகவும் அந்த நாளிதழில் மேலும் கூறப்பட்டுள்ளது.