தெஹிவளையில் இரவில் துப்பாக்கி சூடு: ஒருவர் பலி
தெஹிவளையில் துப்பாக்கி சூட்டிற்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் இன்று (06) இரவு எட்டு மணியளவில் இடம்பெற்றுள்ளது.
தெஹிவளை A க்வாடஸ் விளையாட்டரங்கிற்கு அருகில் மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பாதாள குழு
இது சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இருவர் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக காவல்முறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சம்பவத்தில் காயமடைந்தவர் களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்தவர் தெஹிவளை பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
இரண்டு பாதாள குழுக்களுக்கு இடையே காணப்பட்ட முரண்பாடு காரணமாக இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பில் தெஹிவளை காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |