இந்திய தலைநகரை அதிரவைத்த சம்பவம்! இருவர் அதிரடி கைது
டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலைய நுழைவாயிலுக்கு அருகே வெடித்து சிதறிய காரின் உரிமையாளர்களை அந்நாட்டு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலைய நுழைவு வாயிலுக்கு அருகே திங்கட்கிழமை மாலை 6.50 மணியளவில் கார் ஒன்று பாரிய சத்தத்துடன் வெடித்து சிதறியது.
பயங்கரவாத தாக்குதல் சந்தேகம்
சம்பவத்தின் போது, அருகில் நின்ற சில வாகனங்களுக்கும் தீ பரவியதுடன், 9 பேர் உயிரிழந்தும், 24 பேர் வரைகாயமடைந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Image Credit: Financial Times
இந்த நிலையில், சம்பவ இடத்தில் குண்டுவெடிப்புக்கான குழிகள் அல்லது அடையாளங்கள் கண்டுபிடிக்கப்படவில்லை என்றாலும், ஒரு சிறிய கார் வெடிப்பால் இவ்வளவு பெரிய பாதிப்பு ஏற்படாது, எனவே இது பயங்கரவாத தாக்குதல் என்று சந்தேகம் எழுந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காரின் உரிமையாளர்கள்
அதன்படி, வெடித்து சிதறிய காரின் பதிவு எண் அடிப்படையில் அதன் தற்போதைய உரிமையாளர் நதீம் கான் மற்றும் முன்னாள் உரிமையாளர் முகமது சல்மான் ஆகியோரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Image Credit: NDTV
இந்த சம்பவம் நடப்பதற்கு ஒரு மணித்தியாலத்துக்கு முன்னதாக அரியானாவில் கஷ்மீர் மருத்துவர் ஒருவர் தங்கி இருந்த வீட்டில் 2,900 கிலோ வெடிபொருள் பறிமுதல் செய்யப்பட்டிருந்த நிலையில், இரண்டு சம்பவங்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |