நாட்டை உலுக்கும் டெங்கு நோய் தொற்று: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
இலங்கையில் இந்த ஆண்டு டெங்கு நோய்த்தொற்றுகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், 2026 ஆம் ஆண்டில் சமீபத்திய புள்ளி விபரங்களின்படி இதுவரை 88,088 டெங்கு நோய்த்தொற்றுக்களும் 63 உயிரிழப்புக்களும் பதிவாகி உள்ளது.
இந்த விபரத்தை தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு (NDCU) தெரிவித்துள்ளது.
இதன்படி, இந்த ஆண்டுக்கான டெங்கு இறப்பு விகிதம் 0.07 சதவீதமாக பதிவாகியுள்ளது.
டெங்கு நோய்கள்
ஆகஸ்ட் மாதத்தின் முதல் சில நாட்களிலேயே 2,739 புதிய டெங்கு நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ள நிலையில், கடந்த ஜூலை மாதம் மட்டும் நாடு முழுவதும் 29,975 டெங்கு நோய்த்தொற்றுகள் பதிவாகியிருந்தது.

இது 2026 ஆம் ஆண்டில் ஒரே மாதத்தில் பதிவான அதிகபட்ச டெங்கு நோய் பாதிப்பு என வெளியான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மாவட்ட வாரியான தரவுகளின்படி, கம்பஹா மாவட்டம் அதிகளவு பாதிப்புகளைப் பதிவு செய்துள்ளதுடன், அங்கு 18,739 டெங்கு நோய்த்தொற்றுகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து கொழும்பு மாவட்டத்தில் 17,490 நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன.
இந்த நிலையில் டெங்கு பரவுவதைக் கட்டுப்படுத்த, நுளம்புகள் இனப்பெருக்கம் செய்யும் இடங்களை அகற்றுதல் மற்றும் சுற்றுப்புறத்தைத் தூய்மையாகப் பராமரித்தல் உள்ளிட்ட உடனடித் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சுகாதார அதிகாரிகள் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |