தேசபந்து தென்னகோனுக்கு பிணை!
2022 ஆம் ஆண்டு காலி முகத்திடலில் நடந்த 'கோட்டா கோ காமா' போராட்டத்தின் மீது தாக்குதல் நடத்தியதாக சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோனை பிணையில் விடுவிக்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2022ஆம் ஆண்டு மே மாதம் 09ஆம் திகதி காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட மிலேச்சத்தனமாக தாக்குதல் தொடர்பில் அண்மையில் தேசபந்து தென்னகோன் (20) கைது செய்யப்பட்டிருந்தார்.
பிணை உத்தரவு
முன்னதாக குறித்த சம்பவம் தொடர்பில் தாம் கைதுசெய்யப்படுவதை, தவிர்க்கும் வகையில் முன்பிணை வழங்குமாறு அவர் நீதிமன்றை கோரியிருந்தார்.
எனினும், அவரது முன்பிணை கோரிக்கை கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுரவினால் நிராகரிக்கப்பட்ட நிலையில் அவர் கைதுசெய்யப்பட்டார்.
அதனைதொடர்ந்து, கொழும்பு கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர சந்தேகநபரான தேசபந்து தென்னகோனுக்கு, இன்று(27) வரை விளக்கமறயில் உத்தரவு பிறப்பிக்கபட்டிருந்த நிலையில், பிணை வழங்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

