சிறிலங்கா கிரிக்கெட்டிலிருந்து இலட்சக்கணக்கில் சம்பளம் பெற்ற தேசபந்து தென்னகோன்
கடந்த ஆண்டுகளில் இலவச எரிபொருளுக்கு மேலதிகமாக சிறிலங்கா கிரிக்கெட்டிலிருந்து (SLC) மாத சம்பளமாக ரூ.150,000 முன்னாள் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன்(deshabandu tennakoon) பெற்றுள்ளதாகக் குற்றம் சாட்டிய எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே(Hesha Withanage), இது குறித்து விசாரணை நடத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்தினார்.
“மாதாந்த ஊதியமாக ரூ.150,000 மற்றும் எரிபொருளுடன் மேலதிகமாக மடிக்கணினியையும் பெற்றுள்ளார். இது லஞ்சம் இல்லையா? நீங்கள் இது குறித்து விசாரணை நடத்த வேண்டும்,” என்று நாடாளுமன்றத்தில் பட்ஜெட் மீதான குழுநிலை விவாதத்தின் போது பேசிய எம்.பி. கூறினார்.
சிறிலங்கா கிரிக்கெட்டுக்கு எதிராகவும் அரசாங்கம் செயல்பட வேண்டும்
“தேசபந்து தென்னகோனை கைது செய்ய அரசாங்கம் முயற்சிப்பது போலவே, சிறிலங்கா கிரிக்கெட்டுக்கு எதிராகவும் அரசாங்கம் செயல்பட வேண்டும்,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.
தற்போதைய அரசாங்கத்தில் உள்ளவர்கள் சிறிலங்கா கிரிக்கெட்டால் வாங்கப்பட்டதாகத் தெரிகிறது என்றும் எம்.பி. குற்றம்சாட்டினார்.
“கடந்த ஆட்சியில் இருந்தவர்களை விட தற்போதைய அரசாங்கத்தில் உள்ளவர்கள் சிறிலங்கா கிரிக்கெட்டால் வாங்கப்பட்டதாகத் தெரிகிறது,” என்று அவர் கூறினார்.
சிறிலங்கா கிரிக்கெட்டை நிர்வகிக்கவும் சிறிலங்கா கிரிக்கெட்டை சுத்தம் செய்யவும் புதிய சட்டங்கள் தேவை என்பதை அவர் வலியுறுத்தினார்.
ஒருபோதும் அதைச் செய்ய முடியாது
இதற்கு பதிலளித்த அமைச்சர் சுனில் ஹந்துநெத்தி(sunil handunnetti), தற்போதைய அரசாங்கத்தில் உள்ளவர்களை கடந்த ஆட்சியில் இருந்தவர்களைப் போல ஒருபோதும் சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனத்தால் வாங்க முடியாது என்றார்.
“நாங்கள் சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனத்தால் வாங்கப்படவில்லை, எதிர்காலத்தில் ஒருபோதும் வாங்கப்பட மாட்டோம்,” என்று அவர் கூறினார்.
எவரும் எதிர்பார்க்காமல் விசாரணைக்கு அழைத்தோம்
“கடந்த காலத்தில் நான் பொது நிறுவனங்கள் குழுவின் (COPE) தலைவராக இருந்தேன். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால(Tilanga Sumathipala) அந்த நேரத்தில் துணை சபாநாயகராக இருந்தபோது சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவராக இருந்தார். அவர் COPE முன் அழைக்கப்படுவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. இருப்பினும், அந்த நேரத்தில் நாங்கள் அவரை அழைத்து சிறிலங்கா கிரிக்கெட்டின் முறைகேடுகளை வெளிப்படுத்தினோம்,” என்று அவர் குறிப்பிட்டார்.
73 விளையாட்டுகளை உள்ளடக்கிய ஒரு புதிய விளையாட்டு சட்டத்தை அரசாங்கம் கொண்டு வரும் என்று விளையாட்டு அமைச்சர் சுனில் கமகே கூறினார்.
“இந்த ஒற்றை சட்ட மூலத்தால் 73 விளையாட்டுகள் தொடர்பான நடைமுறைகளை நாங்கள் மாற்றுவோம்” என்று அவர் மேலும் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
2 வாரங்கள் முன்