சிறை உணவை தவிர்க்கும் தேசபந்து: எடுக்கப்படவுள்ள முடிவு
சிறைச்சாலை தடுப்புக் காவலில் இருக்கும் முன்னாள் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோனின் வீட்டிலிருந்து உணவு பெறுவதற்கான கோரிக்கையை சிறைச்சாலை திணைக்களம் பரிசீலித்து வருவதாக தெரிவித்துள்ளது.
தேசபந்து தென்னகோன் தனது உணவை வீட்டிலிருந்து கொண்டு வர அனுமதி கோரியுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
தேவையான நடவடிக்கை
அதன்படி, சம்பந்தப்பட்ட கோரிக்கைக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய காரணங்களை சமர்ப்பிக்குமாறு அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.
காரணங்களை கருத்தில் கொண்டு, தேசபந்து தென்னகோன் சிறையில் இருக்கும் போது அவருக்கு வீட்டிலிருந்து உணவு வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் ஊடகபேச்சாளர் தெரிவித்துள்ளார்.
விளக்கமறியல் உத்தரவு
வெலிகம பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு முன்னால் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக கைது பிடியாணை பிறப்பிக்கப்பட்டு 20 நாட்களுக்குப் தேடுதலுக்கு பிறகு, தேசபந்து தென்னகோன் சமீபத்தில் மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
இந்த நிலையில், அவரை காவலில் எடுத்த காவல்துறையினர் நீதிமன்றில் முற்படுத்தியதையடுத்து, ஏப்ரல் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டு, தற்போது தும்பர சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா… 45 நிமிடங்கள் முன்
