“டெஸ்மன் டூட்டுவும் சர்வதேச அரசியலும்” - கொழும்புத் தமிழச் சங்கத்தில் விசேட உரை
தென் ஆபிரிக்க இன ஒடுக்குமுறைக்கு எதிராகச் செயற்பட்ட பேராயர் டெஸ்மன் டூட்டுவை மையப்படுத்தி “டெஸ்மன் டூட்டுவும் சர்வதேச அரசியலும்” என்ற கருப்பொருளில் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் உரை ஒன்று இடம்பெறவுள்ளது.
சங்கத்தின் பேரவை உறுப்பினர் பேராசிரியர் தை.தனராஜ் தலைமையில் நாளைய தினம் (26) புதன்கிழமை மாலை 6 மணிக்கு சங்கத்தின் சங்கரப்பிள்ளை மண்டபத்தில் இந்நிகழ்வுக்கு இடம்பெறவுள்ளது.
இங்கு சங்கத்தின் நிர்வாகக் குழு உறுப்பினரும் பத்திரிகையாளருமான அ.நிக்ஸன் உரையாற்றவுள்ளார்.
வெள்ளவத்தை உருத்துரா மாவத்தை ஊடான சங்கம் மாவத்தையிலுள்ள கொழும்புத் தமிழச் சங்கம் மாதாந்தம் நடத்தும் அறிவோர் ஒன்று கூடல் நிகழ்விலேயே மேற்படி தலைப்பில் உரை இடம்பெறவுள்ளது.
சமகால புவிசார் அரசியல் மற்றும் பேராயர் டெஸ்மன் டூட்டுவின் ஈழத்தமிழ் மக்கள் மீதான அக்கறை குறித்த விடயங்கள் உரையின் பிரதான கருப்பொருளாகும்.
உரையின் பின்னர் கேள்வி பதில் இடம்பெறும். மாணவர்கள், ஆர்வலர்கள், அரசியல் பிரதிநிதிகள் உட்பட அனைவரையும் கலந்துகொள்ளுமாறு சங்கத்தின் கல்விக் குழு அழைப்பு விடுத்துள்ளது.