சிங்கள, முஸ்லிம் புலம்பெயர் அமைப்புகளும் பாரிய செல்வந்த நிலையில்- மஹிந்த சமரசிங்க
தற்போது கொரோனா குறித்து பேசுகின்றோம். ஆனால் அன்று விடுதலைப் புலிகளை அழிக்காது, தலைவர் பிரபாகரனை அழிக்காது விட்டுவைத்திருந்தால் இன்று நாடு இரண்டாக பிளவுபட்டிருக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க (Mahinda Samarasinghe) சபையில் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் தெடர்ந்து உரையாற்றுகையில்,
அரச தலைவர் அண்மையில் ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றும் வேளையில் வெளிநாடுகளில் வாழும் புலம்பெயர் அமைப்புகளுக்கு தான் அழைப்பு விடுப்பதாக கூறினார்.
தன்னுடன் பேச்சுவார்த்தைக்கு வருமாறு கூறினார். இதன்போது தடைசெய்யப்பட்ட புலம்பெயர் அமைப்புகளை சந்திக்க மாட்டேன். அங்கீகரிக்கப்பட்ட புலம்பெயர் அமைப்புகளை மட்டுமே நான் சந்திப்பேன் என எதுவும் கூறவில்லை. ஒட்டுமொத்த புலம்பெயர் அமைப்புகளுடன் பேசுவதற்கு தயார் என்பதையே அவர் கூறினார்.
தமிழ் புலம்பெயர் அமைப்புகள் மட்டுமல்ல, சிங்கள, முஸ்லிம் புலம்பெயர் அமைப்புகளும் உள்ளன. அவர்களும் பாரிய செல்வந்த நிலையில் உள்ளனர். அவர்கள் இன்றும் நாட்டை நேசிக்கின்றனர்.
அவர்களையும் இணைத்துக்கொள்ள வேண்டும். அதேபோல் தடைசெய்யப்பட்ட புலம்பெயர் அமைப்புகளுடனும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும், அப்போதுதான் அவர்களின் நிலைப்படும் என்னவென்பது தெரியும்.
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவின் இரண்டு ஆண்டுகால ஆட்சியில் தேசிய ரீதியில் மட்டுமல்ல சர்வதேச மட்டத்திலான சவால்களையும் சமாளித்து நாட்டை நிருவகிக்க நேர்ந்துள்ள நிலையில், பாரிய அளவிலான வேலைத்திட்டங்களையும் முன்னெடுத்துள்ளார் என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும்.