ஏன் அப்படி செய்தார் மைத்திரி ? ஆளும் தரப்பில் பரவும் வதந்திகள்
Maithripala Sirisena
boycott
ruling-party-meeting
By Sumithiran
நாடாளுமன்ற அமர்வுகள் ஆரம்பமானதன் பின்னர் இடம்பெற்ற ஆளும் கட்சியின் முதலாவது குழு கூட்டத்தில் முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன (Maithripala Sirisena)கலந்து கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இதில் விசேட அம்சம் என்னவென்றால், இந்தக் குழுக் கூட்டத்தின் போது மைத்திரிபால சிறிசேன சபையில் காணப்பட்டார்.
இதன்படி, நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற குழு கூட்டத்தில் முன்னாள் அரசதலைவர் சபையில் இருந்தும் கலந்து கொள்ளாதது தொடர்பில் அரசாங்கத்திற்குள் பல்வேறு வதந்திகள் பரவி வருகின்றன.