நள்ளிரவு முதல் எரிபொருள் விலை அதிகரிப்பு - விபரம் இணைப்பு
Fuel Price In Sri Lanka
Sri Lanka Fuel Crisis
By Vanan
இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் டீசல் மற்றும் மண்ணெண்ணெய் விலைகளில் திருத்தம் மேற்கொள்ள இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.
இதற்கமைய, டீசல் லீற்றர் ஒன்றின் விலை 15 ரூபாவினாலும், மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 25 ரூபாவினாலும் அதிகரிக்கப்படவுள்ளது.
புதிய விலை
இதன்படி, தற்போது 415 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் ஒரு லீற்றர் டீசல் இன்று நள்ளிரவு முதல் 430 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது.
அத்துடன், தற்போது 340 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் ஒரு லீற்றர் மண்ணெண்ணெய் இன்று நள்ளிரவு முதல் 365 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது.
பிரபாகரன் புத்தகங்களைத் தந்தாரா? இராணுவச் சிப்பாய் கேட்ட கேள்வி.. 10 மணி நேரம் முன்
தமிழ்ப் பொது வேட்பாளர்: பயங்களும் பதில்களும்
3 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி