ஜே.வி.பியும் கொலைகார கூட்டமே! மகிந்தவின் புதல்வர் குற்றச்சாட்டு
விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் மக்கள் விடுதலை முன்னணிக்கும் இடையில் எவ்வித வித்தியாசங்களும் இல்லை என அமைச்சர் நாமல் ராஜபக்ச (Namal Rajapakse) தெரிவித்துள்ளார்.
இரண்டு தரப்பினரும் கொலைகளை செய்தனர் என்றும் அவர் மேலும்குற்றம்சாட்டியுள்ளார்.
பெலியத்தை பிரதேசத்தில் நடைபெற்ற சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
ஜே.வி.பியின் வரலாற்றை நான் பெலியத்தை மக்களுக்கு புதிதாக கூற வேண்டியதில்லை. அவர்களின் அரசியல் சீர்குலைப்பது.
அவர்கள் களஞ்சியங்களையும், வைத்தியசாலைகளையும் பிரதேச செயலகங்களையும் தீ மூட்டி எரித்தவர்கள். ஜே.வி.பியே இலங்கை அரசியல் வரலாற்றில் அதிகளவில் தீ மூட்டியுள்ளனர். தற்போது மின்சாரம் இல்லை எனக் கூறுகின்றனர்.
அந்த காலத்தில் மின்மாற்றிகளை தீ மூட்டி எரித்தனர். புலிகளுக்கும் ஜே.வி.பிக்கும் இடையில் பெரிய வித்தியாசமில்லை. இரண்டு தரப்பினரும் கொலைகளை செய்தனர்.
இதனால் பழையவற்றை கைவிடுங்கள் என்று ஜே.வி.பியினருக்கு நாங்கள் கூறுகின்றோம். நாட்டை முன்னேற்ற வேண்டும். அரச ஊழியர்கள் என்ற வகையில் எமக்கு பொறுப்புள்ளது. உரிமைகளை மாத்திரம் பேசி பயனில்லை.
பெண்கள் ஆதரவளிக்கும் தரப்புக்கே ஆட்சி அதிகாரம் செல்லும் என்று நாங்கள் எப்போதும் நம்புகிறோம். கூட்டங்களுக்கு பெண்கள் அதிகளவில் வந்திருந்தால், நாங்கள் தென்புடன் வீடுகளுக்கு செல்வோம்.
கூட்டங்களில் ஆண்கள் அதிகமாக இருந்தால், சற்று தளர்வுடன் செல்வோம். கட்சி என்ற வகையில் பெண்களை பாதுகாக்க நாங்கள் நடவடிக்கை எடுப்போம்.
அப்போதுதான் இந்த சமூகத்தை பாதுகாக்க முடியும். சமூகத்தை கட்டியெழுப்ப முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.