பிரதி காவல்துறை மா அதிபர் அதிரடியாக கைது
CID - Sri Lanka Police
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
Crime Branch Criminal Investigation Department
By Thulsi
கொழும்பு பிரிவுக்கு பொறுப்பான பிரதி காவல்துறைமா அதிபர் உதித்த லியனகே (Uditha Liyanage) கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் (CID) அவர் இன்று (25) கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
புதையல் தோண்டுவதற்கு முற்பட்ட குற்றச்சாட்டில் குறித்த காவல்துறை மா அதிபரின் மனைவி உட்பட 8 பேரை அநுராதபுரம் காவல்துறையினர் முன்னதாக கைது செய்திருந்தனர்.
தொலைபேசியில் அழுத்தம்
இதனை அடுத்து தாம் பிரதி காவல்துறை மா அதிபர் என்றும், தமது மனைவியை உடனடியாக விடுவிக்குமாறும் அநுராதபுரம் காவல்துறையினருக்கு சந்தேநபர் தொலைபேசியில் அழுத்தம் கொடுத்ததாக குற்றஞ்சாட்டப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில், இன்றைய தினம் சந்தேகநபரை கைது செய்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா?
6 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்