அரசியல் பழி வாங்கலின் முழு வடிவமே ரணிலின் கைது : அநுர அரசை சாடும் தயாசிறி

Anura Kumara Dissanayaka Ranil Wickremesinghe Dayasiri Jayasekara Ranil Wickremesinghe Arrested
By Sathangani Aug 25, 2025 03:38 AM GMT
Report

சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்களுக்கு மாத்திரம் ஜனாதிபதி வரையறுத்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர (Dayasiri Jayasekara) தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்த அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு சட்டத்தால் விலக்களிக்கப்பட்டுள்ளதுடன் ரணிலின் கைது அரசியல் பழிவாங்கலின் முழு வடிவம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

கொழும்பில் நேற்று (24) நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ரணிலை உடனடியாக விடுதலை செய்யுங்கள் : வெளிநாட்டிலிருந்து வந்த அவசர கோரிக்கை

ரணிலை உடனடியாக விடுதலை செய்யுங்கள் : வெளிநாட்டிலிருந்து வந்த அவசர கோரிக்கை

நாடு வங்குரோத்து நிலையில் இருந்த போது 

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, ”அரசாங்கத்தின் அரசியலமைப்புடனான சர்வாதிகாரத்தை தோற்கடிக்க அரசியல், கட்சி பேதமின்றிய வகையில் அனைவரும் ஒன்றுபட வேண்டும். அத்துடன் ஜனாதிபதிகளுக்கான சிறப்புரிமைகளை இரத்துச் செய்தார்.

2022 ஆம் ஆண்டு நாடு வங்குரோத்து நிலையடைந்திருந்த போது தனிமனிதனாக சவால்களை பொறுப்பேற்று நாட்டை குறுகிய காலத்தில் மீட்டெடுத்தார். அந்த கௌரவத்தை அவருக்கு வழங்க வேண்டும்.

அரசியல் பழி வாங்கலின் முழு வடிவமே ரணிலின் கைது : அநுர அரசை சாடும் தயாசிறி | Sjb Mp Dayasiri Statement Of Ranil S Arrest

வெளிநாட்டு கையிருப்பை அதிகரித்துக் கொண்டுள்ளோம் என்று மார்தட்டிக் கொள்ளும் சூழலை இந்த அரசாங்கத்துக்கு ரணில் விக்ரமசிங்க தான் ஏற்படுத்திக் கொடுத்தார் என்பதை மறந்துவிடக் கூடாது.

அமைச்சு மட்டத்தில் நியமிக்கப்பட்டுள்ள ஊழல் எதிர்ப்பு குழு ஊடாகவே முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு (Ranil Wickremesinghe) எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இந்த குழுவில் மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர்கள் தான் உள்ளார்கள். பத்தரமுல்ல கட்சி அலுவலகத்தின் உறுப்பினர்கள் குழுவின் உறுப்பினர்களாக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டார்கள்.

ரணிலின் கைது சிறிய பிரச்சினை: எம்மை எதுவும் செய்ய முடியாது - பிமல் ரத்நாயக்க எக்காளம்

ரணிலின் கைது சிறிய பிரச்சினை: எம்மை எதுவும் செய்ய முடியாது - பிமல் ரத்நாயக்க எக்காளம்

 நீதித்துறைக்கு விடுத்த கடும் அச்சுறுத்தல்

பத்தரமுல்ல கட்சி அலுவலகத்தில் இந்த கண்காணிப்பை 'பி.ஆர்'என்பவர் தான் வழிநடத்தியுள்ளார். ஆகவே இது அரசியல் பழிவாங்கலின் முழு வடிவத்தையும் வெளிப்படுத்துகிறது.

அரசியல் பழி வாங்கலின் முழு வடிவமே ரணிலின் கைது : அநுர அரசை சாடும் தயாசிறி | Sjb Mp Dayasiri Statement Of Ranil S Arrest

சுதத்த திலகசிறி  எனும் யூடியுபரின் செயற்பாடு நீதித்துறைக்கு விடுத்த கடும் அச்சுறுத்தலாகும். ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்படுவதற்கு முன்னர் இந்த நபர் 'ரணில் விக்ரமசிங்க 14 நாட்கள் சிறை செல்வார், அவ்வாறு நடக்காவிடின் தான் யூடியூபர் தொழிற்றுறையில் இருந்து விலகுவதாக' குறிப்பிட்டுள்ளார்.

இவர் மக்கள் விடுதலை முன்னணிக்காகவே செயற்படுகிறார். இவ்வாறான கருத்துக்களினால் நீதிபதிகளுக்கு மறைமுக அழுத்தம் பிரயோகிக்கப்படுகின்றது.

சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்களுக்கு மாத்திரம் ஜனாதிபதி வரையறுத்துள்ளார். இந்த அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு சட்டத்தால் விலக்களிக்கப்பட்டுள்ளது. இது முற்றிலும் முறையற்றதொரு செயற்பாடு.” என தெரிவித்தார்.

எதிர்க்கட்சிகளுக்கு சவால் விடும் JVP டில்வின் சில்வா

எதிர்க்கட்சிகளுக்கு சவால் விடும் JVP டில்வின் சில்வா

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
நன்றி நவிலல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021