மன்னாரை வந்தடைந்த தியாக தீபம் திலீபனின் ஊர்தி பவனி
தியாக தீபம் திலீபனின் ஊர்தி பவனி மன்னாரை (Mannar) வந்தடைந்துள்ளது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் இளைஞர் அணியின் ஏற்பாட்டில் தியாக தீபம் திலீபனின் 38 ஆம் ஆண்டு நினைவு தினம் முன்னெடுக்கப்பட்டு வரகின்றது.
இதன் அடிப்படையில், திலீபன் வழியில் வருகிறோம் என்று ஊர்தி பவனியொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நகர பகுதி
இந்த பவனி, இன்று (19) காலை மன்னார் நகர பகுதியை வந்தடைந்துள்ளது.
தியாக தீபம் தீலீபனிம் திருவுருவப்படம் தாங்கிய ஊர்தி கடந்த ஒரு வாரகாலமாக தமிழர் தாயக பகுதிகளில் அஞ்சலிக்காக சென்று வருகின்ற நிலையில் மன்னார் மக்களின் அஞ்சலிக்காக இன்றையதினம் வருகை தந்திருந்தது.
பொது மக்கள்
இதன்போது பொது மக்கள் அருட்தந்தையர்கள் இணைந்து அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
மேலும், மன்னார் நகர் பிரதான சுற்றுவட்ட பகுதியில் பொது மக்களின் அஞ்சலிக்காக பவனி நிறுத்தப்பட்டதுடன் அதனை தொடர்ந்து மன்னார் நகர பேருந்து தரிப்பிடத்திலும் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
