அமைச்சர் ஒருவரால் கடும் கோபமடைந்த கோட்டாபய!
அமைச்சர் தினேஷ் குணவர்த்தனவின் செயற்பாடு காரணமாக அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச கடும் கோபத்திற்கு உள்ளானதாக தென்னிலங்கைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்றைய தினம் அமைச்சரவை மாற்றம் இடம்பெற்ற வேளையில் கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தனவும் குறித்த இடத்திற்கு வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
காமினி லொக்குகே மற்றும் பவித்ரா வன்னியாராச்சி ஆகியோருக்கு அமைச்சர் பதவிகளை வழங்கிய அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச அங்கிருந்து சென்றுள்ளார்.
அவசர கூட்டம் ஒன்றில் கலந்துக் கொள்வதற்காக அரச தலைவர் சென்று, திரும்பி வரும் போது எஸ்.பீ.திஸாநாயக்க மாத்திரமே இருந்துள்ளார். அங்கிருந்த தினேஷ் குணவர்தன காணாமல் போயுள்ளார்.
தினேஷ் குணவர்த்தனவின் செயற்பாடு காரணமாக அவருக்கு வழங்க தீர்மானிக்கப்பட்ட கைத்தொழில் அமைச்சு பதவி அருக்கு கிடைக்காமல் போயுள்ளது.
அதற்கமைய தினேஷ் குணவர்தன அங்கிருக்காமையினால் தொழில் அமைச்சு எஸ்.பீ.திஸாநாயக்கவுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.