இலங்கைக்கு நேரடி விமான சேவையை ஆரம்பிக்கும் நாடு
இலங்கைக்கும் வியட்நாமிற்கும் இடையே புதிய நேரடி விமான சேவை வாரத்திற்கு மூன்று முறை இயக்கப்படவுள்ளது.
இந்த புதிய நேரடி விமான சேவை எதிர்வரும் 2026 ஆகஸ்ட் 16ஆம் திகதி முதல் ஆரம்பிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
வியட்நாமின் முன்னணி விமான சேவை நிறுவனமான வியட்நாம் ஏர்லைன்ஸ் (Vietnam Airlines), ஹோ சி மின் (Ho Chi Minh) நகரத்திற்கும் கொழும்புக்கும் இடையே இந்த சேவை ஆரம்பிக்கப்பட உள்ளது.
விமானங்களின் எண்ணிக்கை
இரு நாடுகளுக்கும் இடையிலான பிராந்திய இணைப்பு, சுற்றுலாத்துறை மற்றும் வர்த்தகப் பயணங்களை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்த புதிய சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

வியட்நாம் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் 2026 ஆம் ஆண்டிற்கான பாரிய கோடைகால விரிவாக்க மூலோபாயத்தின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த விரிவாக்கத்தின் கீழ், இரண்டு புதிய ஏர்பஸ் (Airbus) விமானங்கள் சேர்க்கப்படவுள்ளதுடன், தாய்லாந்தின் புகெட் (Phuket) நகருக்கான புதிய சேவைகள் மற்றும் பல சர்வதேச வழித்தடங்களில் விமானங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
குறிப்பிடத்தக்க மைல்
இந்த புதிய விமான சேவை விரிவாக்கமானது இலங்கையின் வான்வழிப் போக்குவரத்து துறையில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாகும்.
தென்கிழக்கு ஆசிய வான்வழிப் போக்குவரத்து வலையமைப்பில் இலங்கை ஒரு முக்கிய மையமாக (Hub) மாறிவருவதையே இது பிரதிபலிக்கிறது.
பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்தை எளிதாக்குவதன் மூலம், இந்த புதிய சேவை இலங்கை மற்றும் வியட்நாம் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே ஆழமான பொருளாதார மற்றும் கலாச்சார உறவுகளை வளர்க்கும் என்றும், இது இலங்கையின் உள்ளூர் சுற்றுலாத்துறைக்கு பெரும் பங்களிப்பை வழங்கும் என்றும் வியட்நாம் ஏர்லைன்ஸ் எதிர்பார்ப்பு வெளியிட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
சித்திரவதையின் காயங்கள் உடலில் மாத்திரம் தெரிவதல்ல… 9 மணி நேரம் முன்