காவல்துறை அதிகாரியால் சுற்றுலா பயணிக்கு நிகழ்ந்த அவமானம் - வெடித்தது புதிய சர்ச்சை (காணொலி )
சுற்றுலா பயணிக்கு எரிபொருள் வழங்க மறுப்பு
காலியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் சுற்றுலா பயணி ஒருவருக்கு காவல்துறை அதிகாரி எரிபொருள் வழங்க மறுத்த சம்பவம் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.
நேற்றையதினம் மோட்டார் சைக்கிளில் சென்ற சுற்றுலா பயணி எரிபொருள் பெறமுயற்சித்த வேளை காவல்துறை அதிகாரி ஒருவர் அவரை தடுத்துள்ளார்.
Rupees are printed in plain papers and has no value. Dollars have to be earned. Banning of Qatar fund was lifted overnight when @kanchana_wij visited Qatar. You think tourist will ever come back to be treated this way. @fernandoharin @RW_UNP @GotabayaR pic.twitter.com/jX5Qcnfc2c
— bilalfassy (@bilalfassy) July 2, 2022
காவல்துறை அதிகாரியின் மோசமான செயல்
இது தொடர்பாக வெளியான காணொலி காட்சியில், சுற்றுலாப் பயணிக்கு எரிபொருளை வழங்க மறுத்த காவல்துறை அதிகாரி எமது தேசிய கொள்கை சுகாதார ஊழியர்களுக்கே தற்போது எரிபொருள் வழங்குவது என தெரிவித்துள்ளார்.
குறித்த காவல்துறை அதிகாரியின் செயற்பாடு தொடர்பில் இலங்கை சுற்றுலாத்துறை தனது அதிருப்தியை காவல்துறை மா அதிபருக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளது.