தேசிய கீதத்தையும் கொடியையும் மனதார விரும்பவில்லை : தமிழரசு எம்.பி

Sri Lankan Tamils Parliament of Sri Lanka Anura Kumara Dissanayaka ITAK
By Sathangani Dec 06, 2024 04:21 PM GMT
Report

எமது நாட்டின் தேசியக் கொடியையும் தேசிய கீதத்தையும் நாங்கள் மனதார விரும்பவில்லை ஆனால் மதிப்பளிக்கின்றோம் என தமிழரசுக் கட்சியின் (ITAK) செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ப. சத்தியலிங்கம் (P. Sathiyalingam) தெரிவித்துள்ளார்.

இன்று (06) நாடாளுமன்றத்தில் ஆற்றிய அவரது கன்னி உரையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “நாங்கள் எதிர்க்கட்சி என்ற பெயருடன் அமர்ந்துள்ளோம், ஆனாலும் அரசாங்கம் முன்னெடுக்கும் அனைத்து முற்போக்கான செயற்பாடுகளுக்கும் நாம் உங்களுடன் இருப்போம்.

சிறுபராயத்தில் இருந்தே ஆட்சியாளர்களுக்கு எதிரான மனநிலையுடன் வளர்ந்தவர்கள் நாங்கள். எனது தந்தை ஒரு பொதுநலவாதி, தனது வாழ்க்கை முழுவதும் தூய்மையான கம்யூனிசவாதியாக வாழ்ந்தவர். நான் அவரின் வளர்ப்பில் வந்ததால் இன, மத, குல வேறுபாடு எனக்கில்லை.

இலங்கையில் சிறப்பு பல்கலைக்கழகங்களை நிறுவ வேண்டும் : குகதாசன் எம்.பி கோரிக்கை

இலங்கையில் சிறப்பு பல்கலைக்கழகங்களை நிறுவ வேண்டும் : குகதாசன் எம்.பி கோரிக்கை

இறந்த உறவுகளை வணங்குதல்

ஆனால் இந்த நாட்டில் எண்ணிக்கையில் சிறுபான்மையானவர்கள். அனைத்து விதத்திலும் இந்த நாட்டின் ஏனைய மக்களுடன் சமனாக நடத்தப்படவில்லை என்ற எண்ணத்துடன் வளர்ந்தவர்கள். அதனாலோ என்னவோ எமது நாட்டின் தேசியகீதத்தையும் தேசியக்கொடியையும் நாங்கள் மனதார விரும்பவில்லை, ஆனால் மதிப்பளிக்கின்றோம்.

இந்த மனநிலை எனக்கு மட்டுமல்ல எனது வயதையொட்டிய இன்னும் பல ஆயிரக்கணக்கானவர்களுக்கு உள்ளது. ஆனால் அதை வெளிப்படுத்தும் சந்தர்ப்பம் அவர்களுக்கு கிடைக்கவில்லை. இந்த நிலை ஏற்பட்டதையிட்டு பல சந்தர்ப்பங்களில் நான் மனவேதனை அடைந்துள்ளேன்.

தேசிய கீதத்தையும் கொடியையும் மனதார விரும்பவில்லை : தமிழரசு எம்.பி | Dislike The National Flag And National Anthem Mp

நான் விரும்பும் தேசியகீதத்தையும் நான் விரும்பும் தேசியக்கொடியையும் எனது வாழ்க்கைக் காலத்திற்குள் ஏற்படுத்திக் கொடுக்கவேண்டிய பாரிய பொறுப்பு இந்த அரசினுடையது. நான் சொல்ல விழையும் விடயத்தை நீங்கள் அனைவரும் புரிந்திருப்பீர்கள் என எண்ணுகிறேன்.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தனது உரையில் சமாதானம் ஒவ்வோர் மனதிலும் இருந்து தொடங்கவேண்டும் என குறிப்பிட்டார். உண்மை, ஆனால் அதை எங்கிருந்து தொடங்கலாம் என்று சிந்தித்தால் அது உங்கள் பக்கத்திலிருந்துதான் தொடங்க வேண்டும் என நான் நினைக்கிறேன்.

யுத்தத்தால் இறந்த உறவுகளை வணங்கும் நினைவேந்தலுக்கு நீங்கள் தடை போடவில்லை, அது உங்கள் நல்லெண்ணத்தை காட்டுகிறது. அதேநேரம் பலநூற்றுக்கணக்கான இறந்தவர்களின் உடல் புதைக்கப்பட்ட துயிலும் இல்லத்தில் இன்று இராணுவ முகாம் உள்ளது, இவ்விடத்தை விடுவிக்க நடவடிக்கை எடுத்து நல்லெண்ணத்தை காட்டுங்கள்.

டிஜிட்டல் பொருளாதார அமைச்சராக பொறுப்பேற்ற ஜனாதிபதி

டிஜிட்டல் பொருளாதார அமைச்சராக பொறுப்பேற்ற ஜனாதிபதி

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி

அரசியல் கைதிகளை விரைவில் விடுதலை செய்யுங்கள். காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதற்கு மனச்சாட்சியுடன் விடையை தேடுங்கள், அதனூடாக உங்கள் நல்லெண்ணத்தை காட்டுங்கள்.

மகாவலி - எல் வலயத்தில் மூவினமக்களுக்கும் காணிகளை பகிர்ந்தளியுங்கள். ஜனாதிபதி தலைமையில் வரும் அரசாங்கம் நாட்டில் காணப்படும் இருமுக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் என்ற நம்பிக்கை இருக்கின்றது.

தேசிய கீதத்தையும் கொடியையும் மனதார விரும்பவில்லை : தமிழரசு எம்.பி | Dislike The National Flag And National Anthem Mp

முதலாவதாக இந்த நாட்டில் காணப்படும் அரசியல் பிரச்சினைக்கான தீர்வு இரண்டாவதாக பொருளாதார பிரச்சனைக்கான தீர்வு. முதலாவது பிரச்சினைக்கு தீர்வு காணாமல் இரண்டாவதுக்கு முழுமையான தீர்வொன்றை காணமுடியாது.

ஜனாதிபதி தனது உரையில் அரசியல் தீர்வு தொடர்பாக பேசவில்லை என எமது உறுப்பினர்கள் சொன்னாலும் இரு தினங்களுக்கு முன்னர் அவரை சந்தித்தபோது அரசியல் தீர்வு விடயத்தில் தனது நேர்மையான நல்லெண்ணத்தை வெளிக்காட்டினார்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன (Maithripala Sirisena) ஆட்சிக்காலத்தில் புதிய அரசியல் யாப்பின் வரைபு தயாரிக்கப்பட்டபோது வழிநடத்தல் குழுவில் இருந்து மக்கள் விடுதலை முன்னணி தனது பங்களிப்பை வழங்கியிருந்தனர். அந்த முயற்சி தொடரவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். உங்களுடன் சேர்ந்து முன்செல்ல நாங்கள் தயாராகவே உள்ளோம்.

ரஷ்ய இராணுவத்தில் இணைக்கப்பட்ட யாழ் இளைஞர்கள் - அரசிடம் சிறீதரன் எம்பி கோரிக்கை

ரஷ்ய இராணுவத்தில் இணைக்கப்பட்ட யாழ் இளைஞர்கள் - அரசிடம் சிறீதரன் எம்பி கோரிக்கை

பொருளாதாரக் கொள்கை

நாட்டில் இடம்பெற்ற யுத்தம், நாட்டின் வளங்களையும் இந்த நாட்டிற்கு உள்ள சந்தர்ப்பங்களையும் பிரதிபலிக்கும் பொருளாதாரக் கொள்கை இன்மை,  ஆட்சியாளர்களினதும் சகபாடிகளினதும் ஊழல், துஸ்பிரயோகம், வீண்விரயம் என்பவையே பொருளாதார பிரச்சினை ஏற்பட காரணமாகும்.

யுத்தம் முடிவிற்கு வந்து 15 வருடங்களாகிவிட்டது. வடக்கு-கிழக்கு மாகாணங்களில் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மொத்த தேசிய வருமானத்தில் வடக்கு-கிழக்கு மாகாணங்களின் பங்களிப்பு எவ்வளவு?

தேசிய கீதத்தையும் கொடியையும் மனதார விரும்பவில்லை : தமிழரசு எம்.பி | Dislike The National Flag And National Anthem Mp

இன்று எமது மக்களின் பொருளாதாரம் மிக நலிவடைந்துள்ளது. 15,000 இற்கு மேற்பட்ட முன்னாள் போராளிகள், 75,000 விசேட தேவைகள் உள்ள மக்கள், பெண் தலைமைத்துவ குடும்பங்கள், பெற்றோரை இழந்த குழந்தைகள், குழந்தைகளை இழந்த பெற்றோர்கள் என சமூகத்தில் 1/3 பகுதியினர் ஏனையவர்களின் உதவியின்றி சுயமாக எழுந்து நிற்க முடியாதவர்கள்.

எனவே வடக்கு- கிழக்கு மாகாணங்களில் விசேட பொருளாதார மீட்சித் திட்டங்களை ஆரம்பிக்க வேண்டிய பொறுப்பு இந்த அரசிற்குள்ளது, அதற்கான முயற்சியில் உங்களுக்கு கை கொடுக்க நாங்கள் உள்ளோம்.

தொடர்ந்தும் நிவாரணத்தை நம்பி வாழும் மற்றவர்களில் தங்கிவாழும் சமூகத்தை உருவாக்காதீர்கள். அரசாங்கத்தாலும் சர்வதேச மற்றும் உள்ளூர் அரச சார்பற்ற நிறுவனங்களாலும் நடைமுறைப்படுத்தப்பட்ட வாழ்வாதாரத் திட்டங்களை ஆராய்ந்து பாருங்கள். அவற்றில் வெற்றியடைந்த திட்டங்கள் எத்தனை?

வங்காள விரிகுடாவில் நாளை உருவாகும் காற்று சுழற்சி : நா. பிரதீபராஜா வெளியிட்ட அறிவிப்பு

வங்காள விரிகுடாவில் நாளை உருவாகும் காற்று சுழற்சி : நா. பிரதீபராஜா வெளியிட்ட அறிவிப்பு

வெள்ள அனர்த்தம் 

தமது சொந்த உழைப்பில் வாழும் சமூகத்தை கட்டியெழுப்ப பொருளாதார திட்டங்களை தீட்டுங்கள். பாழடைந்த குளங்களை புனருத்தாரணம் செய்து விவசாயக் காணியற்ற குடும்பங்களிற்கு குறைந்தது 2 ஏக்கர் வயல் காணிகளை வழங்குங்கள். இவ்வாறான திட்டங்கள் வெற்றியடைய நாமும் உங்களுடன் சேர்ந்து உழைக்க ஆயத்தமாக உள்ளோம்.

தேசிய கீதத்தையும் கொடியையும் மனதார விரும்பவில்லை : தமிழரசு எம்.பி | Dislike The National Flag And National Anthem Mp

சர்வதேச சட்டத்திற்கு முரணாக ஆட்கடத்தல்காரர்களால் கடத்திச்செல்லப்பட்டு ரஸ்ய இராணுவத்தில் சிலர் பலவந்தமாக இணைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களை விடுவித்து தருமாறும் வடக்கு மாகாணத்தை சேர்ந்த அவர்களது உறவுகள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு தயவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

திட்டமிடப்படாத கட்டுமானங்களும், வடிகால் அமைப்பு சீரின்மையும் அனுமதியற்ற கட்டிட நிர்மானங்களும் வெள்ளமேற்பட முக்கிய காரணங்களாகும். பாதிக்கப்பட்ட மக்களிற்கான உடனடி நிவாரணம் வழங்கப்பட வேண்டும்.

இறுதியாக நாங்கள் இந்த நாட்டின் பூர்வ குடியாக, ஒரு தேசிய இனமாக எங்களின் அடையாளங்களை பேணிக்கொண்டு ஒரு பன்முகத்தன்மை உள்ள வளமான நாட்டை கட்டியெழுப்ப ஒன்றுபடுவோம்“ என தெரிவித்தார்.

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டோருக்கான காலக்கெடு இன்றுடன் நிறைவு

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டோருக்கான காலக்கெடு இன்றுடன் நிறைவு


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Brampton, Canada

02 Apr, 2025
மரண அறிவித்தல்

முனைத்தீவு, New Jersey, United States

02 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

11 Mar, 2025
மரண அறிவித்தல்

Euskirchen, Germany, Coventry, United Kingdom

01 Apr, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 7ம் வட்டாரம், Newmarket, Canada

07 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Pontoise, France

05 Apr, 2025
மரண அறிவித்தல்

நவிண்டில், சுழிபுரம், London, United Kingdom

27 Mar, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், Bad Marienberg, Germany, Hayes, United Kingdom

31 Mar, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, London, United Kingdom

08 Apr, 2022
மரண அறிவித்தல்

கரையூர், பருத்தித்துறை

07 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடி, கொக்குவில் கிழக்கு

08 Apr, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், கொழும்பு, வவுனியா

06 Apr, 2025
மரண அறிவித்தல்

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Witten, Germany

08 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், வண்ணார்பண்ணை

23 Mar, 2025
மரண அறிவித்தல்

இறக்குவானை, கந்தர்மடம், யாழ்ப்பாணம்

07 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி

07 Apr, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

11 Apr, 2022
மரண அறிவித்தல்

தாவடி, கொழும்பு, Toronto, Canada

03 Apr, 2025
மரண அறிவித்தல்

London, United Kingdom, Hayling Island, United Kingdom

19 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
கண்ணீர் அஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொழும்பு

05 Apr, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Muscat, Oman, Toronto, Canada

05 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Scarborough, Canada

05 Apr, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Neuilly-sur-Marne, France

18 Mar, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Le Bourget, France

04 Apr, 2020
13ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012