ஈரானின் புதிய உச்சத் தலைவர்! அமெரிக்காவின் முக்கிய புள்ளி வெளியிட்ட தகவல்
ஈரானின் புதிய உச்சத் தலைவராக மொஜ்தபா கமேனி தெரிவு செய்யப்பட்டிருப்பது துரதிஷ்டவசமான விடயம் என அமெரிக்காவின் முன்னாள் மத்திய புலனாய்வு அமைப்பின் (CIA) பணிப்பாளர் டேவிட் பெட்ரீயஸ் தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஊடகமொன்றுக்கு அளித்த பேட்டியில், மொஜ்தபா கமேனி தனது தந்தையான அலி கமேனியை போன்று கடுமையான கொள்கைகளைக் கொண்ட மதத்தலைவராக இருப்பார் என பெரும்பாலானோர் கருதுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, அவர் சமீபத்தில் பதவி உயர்வு பெற்றிருக்காவிட்டால், அவர் இன்னும் அயத்துல்லா என்ற உயர்ந்த மதபதவியையே பெற்றிருக்க மாட்டார் என்றும் டேவிட் பெட்ரீயஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமெரிக்காவின் கோரிக்கை
இந்த நிலையில், பலரும் ஈரானில் நடைமுறைக்கு ஏற்ற அணுகுமுறையைக் கொண்ட ஒரு தலைவரை எதிர்பார்த்திருந்ததாகவும், அமெரிக்காவின் கோரிக்கைகளுக்கு இணங்க நாட்டின் அணு மற்றும் ஏவுகணை திட்டங்களை கைவிடத் தயார் ஆகும் தலைவராக இருப்பார் என நம்பியிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், தற்போதைய சூழ்நிலையில் அது நிகழும் போல தெரியவில்லை என்று தெரிவித்துள்ள முன்னாள் சிஐஏ பணிப்பாளர், அதிகாரத்தில் அமர்ந்த பிறகு அவர் வேறுபட்ட அணுகுமுறையை எடுத்தால் மட்டும் அதில் மாற்றம் இருக்கலாம் என்று கூறியுள்ளார்.
56 வயதான மொஜ்தபா கமேனி அலி கமேனியின் இரண்டாவது மகன் ஆவார். அதிகாரபூர்வ பதவி எதுவும் இல்லாவிட்டாலும், இந்நாட்டின் சக்திவாய்ந்த இராணுவ அமைப்பாக கூறப்படும் புரட்சிகர காவல் படையின் மற்றும் அதன் தன்னார்வ படையான பாசிஜ் உடன் நெருங்கிய தொடர்புகள் கொண்டவர் எனக் கருதப்படுகிறார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |