உலகளாவிய பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: உலக நாடுகளுக்கு IMF கடும் எச்சரிக்கை
மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் உலகளாவிய பணவீக்கத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாகச் சர்வதேச நாணய நிதியம் எச்சரித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் மேலாண் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா (Kristalina Georgieva) இதனைத் தெரிவித்துள்ளார்.
ஜப்பானிய நிதி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட கருத்தரங்கொன்றில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
எரிசக்தி பாதுகாப்பு
அத்தோடு, குறித்த போரானது எரிசக்தி பாதுகாப்பை ஒரு முக்கிய கவலையாக மாற்றியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் தெரிவித்த அவர், எண்ணெய் விலையில் ஏற்படும் 10% அதிகரிப்பு ஆண்டு முழுவதும் நீடித்தால், அது உலகளாவிய பணவீக்கத்தை 40 அடிப்படைப் புள்ளிகளால் அதிகரிக்கச் செய்யும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதனுடன், மத்திய கிழக்கின் புதிய மோதலால் எமது மீளெழும் திறன் மீண்டும் சோதிக்கப்படுவதை நாம் காண்கிறோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “இந்த புதிய உலகளாவிய சூழலில் கொள்கை வகுப்பாளர்களுக்கான எனது அறிவுரை என்னவென்றால் - நினைத்துக்கூடப் பார்க்க முடியாததை சிந்தித்துப் பார்த்து அதற்குத் தயாராக இருங்கள்” எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |