இறப்பர் கிளைக்கிடையில் சிக்கி சுதேச வைத்தியர் உயிரிழப்பு!
Srilanka
Death
Doctor
Monaragala
Rubber branches
By MKkamshan
மொனராகலை - படல்கும்பர பிரதேசத்தில் இரண்டு இறப்பர் கிளைக்கிடையில் சிக்கி சுதேச வைத்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த 17ஆம் திகதி மாலை வீட்டிலிருந்து சென்ற அவர், வீட்டுக்கு திரும்பாத நிலையில், வீட்டார் அருகிலிருந்த இறப்பர் தோட்டத்துக்கு தேடிச் சென்ற போது இறப்பர் மரத்தின் இரண்டு கிளைகளுக்கு இடையில் இறுகி உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
பாராம்பரிய சுதேச வைத்தியரான நான்கு பிள்ளைகளின் தந்தையான (70 வயது) டீ.எம். கருணாரத்னவே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை படல்கும்பர காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ்ப் பொது வேட்பாளர்: சிவில் சமூகங்கள் எடுத்த முடிவு. 6 நாட்கள் முன்
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி