கத்தாரின் தோஹா மன்றத்தில் பங்கேற்கும் இலங்கை பிரதிநிதி
இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தோஹா மன்றத்தில் பங்கேற்பதற்காக கத்தாருக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.
அதன்போது அமைச்சர், இன்று முதல் எதிர்வரும் 12ஆம் திகதி வரை குறித்த மன்றத்தில் கலந்துகொள்ளவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பல்முனை சர்வதேச வரிசையில் BRICS இன் வளர்ந்து வரும் தாக்கம் என்ற தொனிப்பொருளின் கீழ் உயர்மட்ட குழு அமர்வில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் பங்கேற்கவுள்ளார்.
பலமான இருதரப்பு உறவுகள்
தோஹா மன்றம் என்பது கத்தார் மாநிலத்தால் நிதியுதவி செய்யப்படும் ஒரு உலகளாவிய தளமாகும், இது உலகம் எதிர்கொள்ளும் முக்கியமான சவால்களைப் பற்றி விவாதிக்க மற்றும் புதுமையான மற்றும் செயல்படக்கூடிய வலையமைப்புகளை உருவாக்க தலைவர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களை ஒன்றிணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த விஜயத்தின் போது அமைச்சர் கத்தார் நாட்டின் வெளிவிவகார அமைச்சரையும் சந்தித்து பலமான இருதரப்பு உறவுகளை மேலும் மேம்படுத்துவது குறித்து கலந்துரையாட உள்ளார்.
மேலும், கத்தார் முதலீட்டு ஆணையம் மற்றும் கத்தாரில் உள்ள முன்னணி வர்த்தக நிறுவனங்களின் மூத்த அதிகாரிகளையும் அமைச்சர் சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |