வேலணையில் சிதைவடைந்த நிலையில் கரையொதுங்கிய டொல்பின்
dolphin
velanai
seasore
By Sumithiran
யாழ்ப்பாணம் - வேலணை, துறையூர் கடற்கரையில் இறந்து உடல் சிதைவடைந்த நிலையில் டொல்பின் ஒன்று இன்று கரையொதுங்கியுள்ளது.
குறித்த டொல்பினை வனஜீவராசிகள் திணைக்களத்தினர் உடற்கூற்று பரிசோதனைக்காக எடுத்து சென்றுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
எக்ஸ் பிறஸ் பேர்ள் கப்பல் சம்பவத்துக்கு பின்னர் ஏழுக்கும் மேற்பட்ட டொல்பின்கள் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கி உள்ளமை குறிப்பிடத்தக்கது.