மல்கம் ரஞ்சித்தை நம்ப வேண்டாம்! ரணில் தரப்பு ஆணித்தரம்

Gotabaya Rajapaksa Ranil Wickremesinghe Cardinal Malcolm Ranjith
By pavan Apr 20, 2024 05:13 AM GMT
Report

தேசிய மக்கள் சக்தி மற்றும் கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம்; ரஞ்சித் ஆகியோரிடம் ஏமாற வேண்டாம் என தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி, இலங்கை மக்களை வலியுறுத்தியுள்ளது.

கர்தினால் ரஞ்சித்துடன் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் கடந்த வியாழக்கிழமை நடத்திய சந்திப்பு தொடர்பில் விசேட அறிக்கையொன்றை விடுத்து ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளார்.

இந்தநிலையில் 2019 ஆம் ஆண்டு முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவுக்கு வழங்கிய ஆதரவைப் போன்று கர்தினால் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளிப்பாரா என ரங்கே பண்டார கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடருந்தின் பெறுமதியான தொழிநுட்ப கேபிள்கள் மாயம்!

தொடருந்தின் பெறுமதியான தொழிநுட்ப கேபிள்கள் மாயம்!

கோட்டாபயவிற்கு ஆதரவு 

2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் சுமார் 272 பேர் கொல்லப்பட்டனர். இது கண்டனத்துடன் நினைவுகூரப்பட வேண்டும்.

2019 அதிபர் தேர்தலின் போது முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச பக்கம் தாம் நின்றதாக கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் சில வருடங்களுக்குப் பின்னர் வாக்குமூலம் அளித்திருந்தார்.

மல்கம் ரஞ்சித்தை நம்ப வேண்டாம்! ரணில் தரப்பு ஆணித்தரம் | Don T Be Fooled By Malcolm Ranjith Ranil

எனினும் முன்னாள் அதிபரால் தான் ஏமாற்றப்பட்டதாக சில நாட்களுக்கு முன்னர் கர்தினால் தெரிவித்திருந்தார். இதன்மூலம் கர்தினால் 2019 இல் 22 மில்லியன் இலங்கையர்களை முன்னாள் அதிபரிடம் ஒப்படைத்தார்.

இதற்குப் பின்னர் தேசத்திற்கு என்ன நடந்தது? இலங்கையின் கடன்களை அடைக்க முடியாமல் விவசாயத் தொழில் வீழ்ச்சியடைந்துள்ளது. மக்கள் அத்தியாவசியப் பொருட்களைப் பெற முடியாமல் திணறினர். பொருளாதாரம் சீர்குலைந்து சிலர் உயிர் இழந்தனர். மக்கள் சட்டத்தை கையில் எடுத்தனர்.

அதிபர் தேர்தலில் ரணிலுக்கே ஆதரவு: டயனா கமகே பகிரங்கம்

அதிபர் தேர்தலில் ரணிலுக்கே ஆதரவு: டயனா கமகே பகிரங்கம்

ஜே வி பியின் சதித்திட்டம் 

இந்தச் சூழலைப் பயன்படுத்திக் கொண்ட ஜேவிபி நாடாளுமன்ற வளாகத்தைக் கையகப்படுத்துவதற்கான சதித்திட்டத்தை ஏற்பாடு செய்து அதனை எரியூட்டச்சென்றது.

பாதுகாப்பு படையினரால் நாடாளுமன்றம் காப்பாற்றப்பட்டது. இதன் மூலமே இன்று வரை ஜனநாயகம் பாதுகாக்கப்பட்டுள்ளது. எனவே மக்கள் இன்றைய நிலைமையை கவனமாகப் படித்து, தேசத்தை சீர்குலைக்கும் குழுவுடன் கர்தினால் ரஞ்சித் தன்னை இணைத்துக் கொண்டாரா என்பதைத் தீர்மானிக்க வேண்டும்.

மல்கம் ரஞ்சித்தை நம்ப வேண்டாம்! ரணில் தரப்பு ஆணித்தரம் | Don T Be Fooled By Malcolm Ranjith Ranil

தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் குழு கடந்த வியாழன் அன்று கர்தினாலைச் சந்தித்து, தாங்கள் ஆட்சிக்கு வந்தால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக எடுக்க உத்தேசித்துள்ள ஏழு நடவடிக்கைகள் குறித்து அவரிடம் விளக்கினர்.

இந்தநிலையில் தேசிய மக்கள் சக்தியின் தலைமையிடம் சில கேள்விகளை எழுப்பவேண்டியுள்ளதாக பாலித ரங்கே பண்டார தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

2019 இல் நடந்த தற்கொலைத் தாக்குதலில், ஜேவிபியின் தேசியப் பட்டியலில் இடம் பெற்றிருந்த இப்ராஹிமின் இரண்டு மகன்கள் அல்லவா ஈடுபட்டனர்? 2019 ஏப்ரல் 21, 2அன்று அப்பாவி மக்களைக் கொன்றதில் இப்ராஹிமின் இரண்டு மகன்களும் நேரடியாக தொடர்பட்டனர்.

எனவே தற்கொலைப் படைத் தீவிரவாதிகளுடன் தொடர்புடைய ஒரு உறுப்பினரை ஏன் தேசிய மக்கள் சக்தி தேசியப் பட்டியலில் சேர்த்தது? எனவே கடந்த வியாழன் அன்று தன்னைச் சந்தித்த தேசிய மக்கள் சக்தி குழுவிடம் இருந்து இந்த விடயத்தில் கேள்வி எழுப்பினாரா என்பதை கர்தினால் நாட்டுக்கு தெரிவிக்க வேண்டும்.

மல்கம் ரஞ்சிதிடம் ஏமாற வேண்டாம்

தேசிய மக்கள் சக்தியை உருவாக்கிய ஜனதா விமுக்தி பெரமுன என்ற ஜேவிபி உயிர்த்த ஞாயிறு குண்டுதாரிகளைப் போலவே கொலைகாரர்களின் கூட்டமாகும்.

இந்த உண்மையை கர்தினால் புரிந்து கொள்ள வேண்டும். முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவுடன் இணைந்து கர்தினால் ஒருமுறை நாட்டை காட்டிக்கொடுத்துள்ளார்.

மல்கம் ரஞ்சித்தை நம்ப வேண்டாம்! ரணில் தரப்பு ஆணித்தரம் | Don T Be Fooled By Malcolm Ranjith Ranil

இந்த துரோகத்தின் காரணமாக இந்த நாட்டு மக்கள் இன்றுவரை தவித்து வருகின்றனர். 2019 இல் இந்த நாட்டு மக்கள் கர்தினாலால் ஏமாற்றப்பட்ட நிலையில், முன்னாள் அதிபரால் கர்தினால் ஏமாற்றப்பட்டார்.

மீண்டும் தேசிய மக்கள் சக்தி மற்றும் கர்தினால் ஏமாற்றப் போகிறோமா என்பதை இந்நாட்டு மக்கள் தீர்மானிக்க வேண்டும். இந்த விடயத்தில் மக்கள் அக்கறையுடன் செயற்பட வேண்டும் என்றும் ஐக்கிய தேசியக்கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார கோரிக்கை விடுத்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   
ReeCha
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா

09 Jul, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, அராலி, Toronto, Canada

06 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வரக்காப்பொல, கிருலப்பனை, பரிஸ், France, Scarborough, Canada

26 Jun, 2024
மரண அறிவித்தல்

கோப்பாய், கொழும்பு, London, United Kingdom

09 Jul, 2025
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, யாழ்ப்பாணம், தெல்லிப்பழை, கொழும்பு

12 Jul, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு

14 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கரவெட்டி, உடுப்பிட்டி, Trichy, British Indian Ocean Terr.

06 Aug, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா

14 Jul, 2023
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மருதங்குளம், உக்குளாங்குளம்

14 Jul, 2009
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, நாரந்தனை, Ilford, United Kingdom

13 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, திருநகர், Ermont, France

11 Jul, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், பரிஸ், France

09 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Noisy-le-Sec, France

25 Jun, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, கிளிநொச்சி

13 Jul, 2010
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, ஸ்ருற்காற், Germany, Scarborough, Canada

10 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொழும்பு, Zürich, Switzerland

15 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்

Aachen, Germany, Cologne, Germany

27 Jun, 2025
மரண அறிவித்தல்

அல்லைப்பிட்டி 2ம் வட்டாரம், Aulnay-sous-Bois, France

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஈச்சமோட்டை, இறம்பைக்குளம், Scarborough, Canada

12 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, Toronto, Canada

07 Jul, 2025
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025