புத்திஜீவிகளே,நாட்டை விட்டு வெளியேறாதீர்கள் - ஒன்றிணைந்து நாட்டைக் கட்டியெழுப்புவோம் - சஜித்
நாட்டில் மூளைசாலிகள் வெளியேற்றம் மிக வேகமாக அதிகரித்துள்ளதாகவும், நாட்டை விட்டு வெளியேறத் தயாராக இருக்கும் புத்திஜீவிகளை நாட்டை விட்டு வெளியேற வேண்டாம் எனக் கோருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பிரபஞ்சம் வேலைதிட்டத்தின் கீழ் பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற பேருந்து வழங்கல் நிகழ்வில் கருத்து உரையாற்றும் போது இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் உரையாற்றிய அவர்,
பிரபஞ்சம் வேலைதிட்டத்தின் மிக முக்கியமான அம்சம்,நாட்டின் கல்வித்துறையை வலுப்படுத்துவதே.
பின்தங்கிய கல்வி முறை
எந்தவொரு நாட்டின் முன்னேற்றத்திற்கும் இது ஒரு அம்சமாக இருந்தாலும்,உலக சவால்களுக்கு ஈடுகொடுக்க முடியாத காலத்திற்கு பொருந்தாத, பின்தங்கிய கல்வி முறையே நம் நாட்டில் நடைமுறையில் உள்ளது.
இந்தச் சவால்களைப் புரிந்து கொண்டு கல்வித்துறையில் பாரிய புரட்சியை ஏற்படுத்த வேண்டும்.
பசுமைப் பொருளாதாரம்,கடல் வளத்தை மையமாகக் கொண்ட நீலப் பொருளாதாரம் உருவாக்கப்பட வேண்டும்(நீலப் பொருளாதாராம் கடலுக்குள்ளும் சமுத்திரங்களுக்குள்ளும் மீன்பிடிப்பு, கடல் அலையில் இருந்து மின்சார உற்பத்தி, கடலுக்கு அடியில் உள்ள கனிம வளங்களை அகழ்ந்து எடுத்தல், கடல் தாவர உயிரினங்களில் இருந்து மருந்துப் பொருட்களைத் தயாரிக்க அனுமதி அளித்தல், கடல் சேவைத் துறை உள்ளிட்ட 13 வகை தொழில் திட்டங்களை இதுவரை உருவாக்கியுள்ளது).
இது வெறும் வார்த்தைகளுக்கு மட்டுப்படுத்தப்படாமல் நடைமுறையில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். வாயாடல் பேசுபவர்களை விட, அடைவுகளைப் பெற்றுத்தரும் பணிகளைச் செய்யக்கூடிய நிபுணத்துவம்,திறமை,ஆற்றல் கொண்டவர்களிடம் நாட்டை ஒப்படைக்க வேண்டும்.
நாட்டின் கல்விக்காக நிதி ஒதுக்க அரசாங்கத்தாலும் கல்வி அமைச்சராலும் முடியாத நிலை ஏற்பட்டாலும், எதிர்க்கட்சியில் இருக்கும் எமக்கு அதற்கான திறமை இருக்கிறது.
அரச அதிகாரம் இல்லாமல் 2742 இலட்சம் செலவில் 57 பேருந்துகள் வழங்கப்பட்டுள்ளது. இதுபோன்ற திட்டங்களை செயற்படுத்தும் போது, இதுபோன்ற திட்டங்களை செயற்படுத்த முடியாத குழுக்கள் தரக்குறைவாக விமர்சிக்கிறது.
மக்களின் கூட்டு மனப்பான்மை
2019 அதிபர் தேர்தலில் வாக்குறுதியாக 2 பொதிகள் பாடசாலை சீருடை,காலணிகள் தருவதாகச்சொன்னபோது மக்கள் மாவீரன் தேவை எனக் கூறி வேறு ஒருவரை நியமித்துக் கொண்டனர். மாவீரன் ஏற்கனவே நாட்டின் வளங்களை சுரண்டி நாட்டை விட்டும் வெளியேறியுள்ளார்.
தற்போதைய சூழ்நிலையில் இருந்து நாட்டை மீட்டெடுக்க இருளில் இருந்து வெளிப்படும் வெளிச்சக் கோடு போன்று 220 இலட்சம் மக்களின் கூட்டு மனப்பான்மை முக்கியமானது” - என்றார்.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்
