ட்ரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு: பரிந்துரைத்த பாகிஸ்தான்
அமெரிக்க (America) ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை (Donald Trump) அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைப்பதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான அண்மைய மோதலைத் தீர்க்க உதவியதற்காக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தநிலையில், குறித்த பரிந்துரை, ஈரானின் அணுசக்தி நிலையங்களைத் தாக்குவதில் இஸ்ரேலுடன் சேருவது குறித்து மீண்டும் ஒருமுறை, ட்ரம்ப்பை சிந்திக்க தூண்டக்கூடும் என்று பாகிஸ்தானில் உள்ள சில ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இஸ்ரேலின் நடவடிக்கை
இதேவேளை, இஸ்ரேலின் நடவடிக்கையை சர்வதேச சட்ட மீறல் மற்றும் பிராந்திய ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தல் என்று பாகிஸ்தான் கண்டித்துள்ளது.
கடந்த மே மாதம், ட்ரம்ப்பின் எதிர்பாராத போர் நிறுத்த அறிவிப்பு, அணு ஆயுத எதிரிகளான இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான நான்கு நாள் மோதலுக்கு திடீரென முற்றுப்புள்ளி வைத்தது.
ஆயுதப் போர்
எனினும், அணு ஆயுதப் போரைத் தணித்ததாகவும் மில்லியன் கணக்கான உயிர்களைக் காப்பாற்றியதாகவும், குறிப்பிட்டிருந்த அவர் அதற்கான பெருமை தனக்குக் கிடைக்காது என்று ட்ரம்ப் பலமுறை சுட்டிக்காட்டியிருந்தார்.
இந்தநிலையில், அமெரிக்க இராஜதந்திர தலையீடு இந்தியாவுடன் சண்டையை முடிவுக்குக் கொண்டுவந்தது என்பதை பாகிஸ்தான் ஒப்புக்கொள்கிறது எனினும், அது இந்திய மற்றும் பாகிஸ்தான் இராணுவங்களுக்கும் இடையிலான இருதரப்பு ஒப்பந்தம் என்று இந்தியா தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
