சாணக்கியன் தொடர்பில் பிள்ளையான் வெளியிட்ட அறிவிப்பு
சாணக்கியனை அரசியலுக்குள் இழுத்து வந்தவர்கள் மற்றும் அவரை தமிழ்த் தேசியவாதியென்று நம்புபவர்கள், எதிர்காலத்தில் சிந்தித்து முடிவுகளை எடுக்கவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரும் இராஜாங்க அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கற்சேனை பகுதியில் கடந்த 16 வருடங்களுக்கு மேல் உடைந்து புனரமைக்கப்படாத நிலையிலிருந்த கற்சேனை விநாயகர் அணைக்கட்டின் மீள்நிர்மாணப் பணிகள் வியாழக்கிழமை (13) ஆரம்பித்துவைக்கப்பட்டன. அங்கு உரையாற்றும்போபோதே இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தனதுரையில் மேலும் தெரிவிக்கையில்,
எம்மை இழிவுபடுத்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர்

தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் எங்களை தொடர்ந்து இழிவுபடுத்தும் செயற்பாடுகளையே முன்னெடுத்துவருகின்றனர். அதிலும் சாணக்கியன் தான் அதிகளவான விமர்சனங்களை முன்னெடுத்துவருகின்றார். அவர் அரசாங்கத்துடன் இணைந்து அரசியலுக்கு வந்தவர். அவரின் தேர்தல் விஞ்ஞாபனம் 2030 என குறிப்பிட்டதில் உள்ளவற்றை அவரிடம் எங்குள்ளது என கேட்கவேண்டும்.
கவலையான விடயம் என்னவென்றால், அவருடைய தாய் இனத்தவருடன் இணைந்து எங்களது வீடுகளையும் அவர் எரிக்கவந்தார். கிழக்கு பல்கலைக்கழகத்திலுள்ள சகோதர இன மாணவர்களுடன் இணைந்து எங்களது காரியாலயத்தையும் எரிக்கமுனைந்தார்.
இதுதானா ஜனநாயகம்

அரசாங்கம் மாறவேண்டும், நாட்டில் மாற்றம்வேண்டும் என்று போராடியபோது சாணக்கியன் மாத்திரம் அவரது அரசியல் எதிரிகளான வியாழேந்திரன், பிள்ளையான் வீடுகளை எரிக்கவேண்டும் என்றும் ஆக்களை கொண்டுவந்து கல்லெறிந்தார். இதுதானா ஜனநாயகம் என்பதை அவர்கள்கேட்டுப்பார்க்கவேண்டும்.
சாணக்கியனும் கிழக்கு
பல்கலைக்கழக மாணவர்களும்
இருந்திருக்காவிட்டால் எமது
வீட்டுக்கு கல்லு வந்திருக்காது.
இவரை அரசியலுக்கு
இழுத்துவந்தவர்கள், இவரை தமிழ்த்
தேசியவாதியென்று நம்புபவர்கள்
சிந்தித்து எதிர்காலத்தில் முடிவுகளை
எடுக்கவேண்டும் என்பது எனது
கோரிக்கையாகும்” என்றார்.