நாடு முழுவதும் 23,000 தாதியர்களுக்கு பற்றாக்குறை : வெளியான தகவல்
நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகளில் சுமார் 23,000 தாதியர்களுக்கான பற்றாக்குறை நிலவுவதாக ஒன்றிணைந்த தாதியர் சேவை சங்கம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் பணிபுரியும் தாதியர்கள் கடும் மன அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் தென்னே ஞானானந்த தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தாதியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே, அவர் இந்த விடயங்களை குறிப்பிட்டுள்ளார்.
கிண்ணியா வைத்தியசாலை
அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போதைய வைத்தியசாலை கட்டமைப்பில் சுமார் 23,000 தாதியர்களுக்கும், சுமார் 14,000 கனிஷ்ட ஊழியர்களுக்கும் வெற்றிடங்கள் நிலவுகின்றது.

இவ்வாறானதொரு சூழ்நிலையில், தாதி ஒருவருக்கு இரண்டு தாதியர்களின் வேலைப் பழுவை சுமக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
சில சந்தர்ப்பங்களில் தாதியர்கள் தொடர்ந்து பல நாட்கள் பணியாற்ற வேண்டியிருப்பதால் தாங்க முடியாத வேலைப் பளு உருவாகியுள்ளது, அண்மையில் கிண்ணியா வைத்தியசாலையில் ஏற்பட்ட சம்பவம் உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கு இந்த நிலைமையே பிரதான காரணம்.
தாதியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கான குறுகிய கால, நடுத்தர கால மற்றும் நீண்ட கால வேலைத்திட்டத்தை உடனடியாக தயாரிக்காவிட்டால், வைத்தியசாலை கட்டமைப்பு மேலும் வீழ்ச்சியடையும்” என தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |