துபாயில் அடுத்தடுத்து வெடிப்புகள்! அதிர்ந்த ஜெபல் அலி துறைமுகம் அருகே
ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) துபாயில் உள்ள ஜெபல் அலி (Jebel Ali) தொழிற்பகுதியில் அடுத்தடுத்து பல வெடிப்புகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அப்பகுதியில் பெரும் தீ விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஈரானின் ஊடகங்கள் மற்றும் பிராந்திய தகவல் ஆதாரங்களை மேற்கோள் காட்டி வெளியிட்ட செய்தியில், சுமார் 20 நிமிடங்களுக்குள் குறைந்தது ஏழு வெடிப்புச் சத்தங்கள் கேட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஜெபல் அலி துறைமுகம் அருகே இருந்து அடர்த்தியான கரும்புகை வானத்தை நோக்கி எழுந்த காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவியுள்ளதாக கூறப்படுகிறது.
🇦🇪 Multiple explosions and a large fire erupted overnight in Dubai’s Jebel Ali industrial area. Reports have fueled speculation of a possible Houthi missile strike after Iraqi media claimed the blasts coincided with a rocket launch from Yemen. UAE authorities have not confirmed… pic.twitter.com/yTqTflJbjX
— Mossad Commentary (@MOSSADil) August 5, 2026
இருவர் கைது
இந்தச் சம்பவத்திற்கு இதுவரை எந்த அமைப்போ அல்லது தனிநபரோ பொறுப்பேற்கவில்லை.

அதேவேளை, தீ விபத்தை படம் பிடித்ததாகக் கூறி இருவரை ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகள் கைது செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |