தமிழக முதலமைச்சரிடம் டக்ளஸ் விடுத்துள்ள கோரிக்கை
stalin
douglas
issue
fisher man
By Vanan
'தானாடா விட்டாலும் தசையாடும்' என்பது தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியுள்ளது என்று தெரிவித்துள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இலங்கைத் தமிழ் மக்கள் சார்பில் தன்னுடைய நன்றியினையும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இலங்கை கடற் பரப்பினுள் அத்துமீறி நுழைந்து சட்ட விரோத தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற தமிழக மீனவர்களுக்கு மாற்று தொழில் முறைகளை ஏற்பாடு செய்து வழங்குவதற்கு தமிழக முதல்வர் நடவடிககைகளை மேற்கொள்ள வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்தியாவில் தங்கி இருக்கின்ற இலங்கை அகதிகளின் வாழ்வாதார மலர்ச்சிக்காக தமிழக முதல்வரினால் நிதி ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளமை தொடர்பாக டக்ளஸ் தேவானந்தாவால் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி