சிறைச்சாலைகளின் பாதுகாப்பு - எடுக்கப்பட்ட நடவடிக்கை
Drones
Chandana Ekanayake
prison security
By Jaso
சிறைச்சாலைகள் திணைக்களத்தின் பாதுகாப்பை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் ட்ரோன் கமரா தொழில்நுட்பத்தை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
டிரோன் கமரா தொழில்நுட்பத்தின் பிரதான நோக்கம் பாதுகாப்பு என்பதுடன், பாதுகாப்புக்கு மேலதிகமாக நிர்வாக விடயங்களுக்கான தொழில்நுட்ப உதவிகளை பெற்றுக்கொள்ளவும் இது பயன்படுத்தப்படும் என சிறைச்சாலை ஊடக பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க(Chandana Ekanayake) தெரிவித்துள்ளார்.
இதற்காக விசேட பயிற்சி பெற்ற சிறைச்சாலை அதிகாரிகள் குழுவொன்று ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலை பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி