மெட்ரோ பேருந்துகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள போதைப்பொருள் கண்டறியும் வசதி!
'லங்கா மெட்ரோ ட்ரான்சிட்' (Lanka Metro Transit) போதைப்பொருள் கண்டறியும் சென்சர் (Drug Detection Sensors) தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய 'மெட்ரோ பேருந்து" சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.
பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்தும் மற்றும் நம்பகமான, பாதுகாப்பான பொதுப் போக்குவரத்து சேவையை வழங்கும் நோக்கில் இந்த சேவை அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த நவீன தொழில்நுட்ப அமைப்பானது, சாரதிகளின் வாகனம் ஓட்டும் திறன் மற்றும் கவனத்தைப் பாதிக்கக்கூடிய போதைப்பொருள் பயன்பாடு அல்லது பிற பாதகமான நிலைகளைத் தானாகவே கண்டறியும் திறன் கொண்டது என குறிப்பிடப்பட்டுள்ளது.
பொதுப் போக்குவரத்து
பயணிகள் போக்குவரத்தில் ஏற்படக்கூடிய சாத்தியமான விபத்துகளை முன்னரே தடுத்து, இதன் மூலம் மேலதிக பாதுகாப்பை உருவாக்க முடியும் என அந்த நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

உயர் பாதுகாப்புத் தரநிலைகள் மற்றும் நவீன தொழில்நுட்பத்தை ஒன்றிணைத்து அனைத்துப் பயணிகளின் பாதுகாப்பிற்காகவும் இந்த முதலீடு செய்யப்பட்டுள்ளதாக லங்கா மெட்ரோ ட்ரான்சிட் மேலும் தெரிவித்துள்ளது.
மேலும், உயர்மட்ட தொழில்முறை சாரத்தியத் தரத்தை பேணுவதன் மூலம் நாட்டிற்கு முன்மாதிரியான பொதுப் போக்குவரத்து சேவையை பராமரிப்பதே இதன் முதன்மை நோக்கமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |