யாழில் கசிப்புடன் கைதான மாணவன் - நீதிமன்றம் கொடுத்த உத்தரவு
Sri Lanka Police
Jaffna
By Vanan
யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறை ஊரிப் பகுதியில் மூன்று லீட்டர் கசிப்புடன் கைது செய்யப்பட்ட 15 வயதுடைய பாடசாலை மாணவனை, சிறுவர் நன்னடத்தை பாடசாலையில் ஒப்படைக்குமாறு யாழ். சிறுவர் நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டார்.
குறித்த வழக்கு இன்று மன்றுக்கு வந்த பொழுது, அச்சுவேலி பகுதியில் அமைந்துள்ள சான்று பெற்ற சிறுவர் நன்னடத்தை பாடசாலையில் ஒப்படைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
கசிப்புடன் கைதான மாணவன்
குறித்த மாணவன் 3 லீட்டர் கசிப்பு மற்றும் 16 லிட்டர் கோடாவினை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ் ஊர்காவற்துறை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
கைது செய்யப்பட்ட சிறுவனை விசாரணைகளின் பின்னர், யாழ். சிறுவர் நீதிமன்றத்தில் முற்படுத்திய போதே சிறுவனை நன்னடத்தை பாடசாலையில் ஒப்படைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.