அமெரிக்கா,கனடாவிலிருந்து யாழ்ப்பாணம் உட்பட பல பகுதிகளுக்கு வந்த ஆபத்தான பொதிகள்
பிரான்ஸ்(france), அமெரிக்கா(us), கனடா(canada) மற்றும் நெதர்லாந்து(netherland) ஆகிய நாடுகளிலிருந்து வந்த பார்சல்களில் இருந்து போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
இதன்படி17.8 மில்லியன் ரூபா பெறுதியிலான போதைப்பொருட்கள் கொழும்பு மத்திய தபால் பரிமாற்ற நிலையத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம் உட்பட பல பகுதிகளுக்கு வந்த பொதிகள்
கண்டி, நீர்கொழும்பு, ஜா-எல, வெள்ளவத்தை, நுகேகொடை, தங்காலை , மஹியங்கனை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளின் முகவரிகளுக்கு இந்த பொதிகள் வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
போதைப்பொருள் தடுப்பு பிரிவிடம் ஒப்படைப்பு
இவ்வாறு 20 பொதிகள் கடந்த இரு வாரங்களாக எவரும் பொறுப்பேற்காத நிலையில் நேற்று முன்தினம் தபால் மா அதிபரினால் விடுக்கப்பட்ட உத்தரவிற்கமைய பொதிகள் சோதனையிடப்பட்டன.
இதன்போது 272 கிராம் குஸ் ரக போதைப்பொருள் 14 பொதிகளாக இருந்ததுடன் 2049 மெத்தாபெட்டமைன் மாத்திரைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலதிக விசாரணைகளுக்காக குறித்த போதைப்பொருட்கள் போதைப்பொருள் தடுப்பு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


உலகில் பெண் விடுதலையை சாத்தியப்படுத்திய தலைவர் பிரபாகரன்…
2 வாரங்கள் முன்