மொஜ்தபா கமேனிக்கு பாதுகாப்பு கிடையாது: இஸ்ரேலிய இராணுவம் பகிரங்க எச்சரிக்கை
ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி உட்பட இஸ்ரேல் நாட்டிற்கு அச்சுறுத்தலாக இருக்கும் எவரையும் இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் தொடர்ந்து இலக்கு வைக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
குறித்த எச்சரிக்கையை இஸ்ரேலிய இராணுவப் பேச்சாளர் எஃபி டெஃப்ரின் விடுத்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர், புதிதாக நியமிக்கப்பட்ட பிறகு பொதுவெளியில் தோன்றாத கமேனியின் இருப்பிடம் குறித்துத் தங்களுக்குத் தெரியாது எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.
பாதுகாப்புப் படைகள்
இருப்பினும், இஸ்ரேலுக்கு எதிராகக் கை தூக்கும் எவருக்கும் விலக்கு கிடையாது என்பதை அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, நாங்கள் ஏற்கனவே நிரூபித்தபடி எதிரிகளைத் தொடர்ந்து துரத்துவோம், அவர்களைக் கண்டுபிடித்துச் செயலிழக்கச் செய்வோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஈரானின் துணை இராணுவப் படையான பாசிஜ் (Basij) உறுப்பினர்களையும் இஸ்ரேல் தொடர்ந்து இலக்கு வைக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
பண்டிகைக் காலம்
அத்தோடு, அந்தப் படையின் தளபதி கோலம்ரேசா சொலைமானியைத் தாங்கள் கொன்றுவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எங்கு அல்லது எப்போது இருந்தாலும் ஈரானியப் படை உறுப்பினர்கள் அனைவரையும் இஸ்ரேலிய இராணுவம் சென்றடையும் என்று டெஃப்ரின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதற்கிடையில், இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வரும் பாஸ்ஓவர் (Passover) பண்டிகைக் காலம் உட்பட ஒரு நீண்ட கால இராணுவ நடவடிக்கைக்கு இஸ்ரேல் தயாராகி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |