முல்லைத்தீவில் தலைக்கவசத்தால் இளைஞர்களினால் கொடூரமாக தாக்கப்பட்ட பெண்கள்

Sri Lanka Police Mullaitivu Law and Order
By Shalini Balachandran Apr 06, 2025 07:01 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in சமூகம்
Report

முல்லைத்தீவில் (Mullaitivu) சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடும் இளைஞர்கள் சிலர் பெண்களை தாக்கிய காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் பரவி பாரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு காவல் பிரிவிற்குட்பட்ட வள்ளிபுனம் பகுதியில் கடந்த இரண்டாம் திகதி சம்பவம் இடம்பெற்றிருந்தது.

இந்தநிலையில் நேற்று (05) குறித்த பகுதிக்கு நேரடியாகச் சென்ற வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பாதிக்கப்பட்ட பெண்களிடம் நிலைமைகளைக் கேட்டறிந்துள்ளார்.

யாழ்ப்பாணம் தொடர்பில் இந்திய பிரதமரிடம் சனத் ஜெயசூர்யா முன்வைத்த கோரிக்கை

யாழ்ப்பாணம் தொடர்பில் இந்திய பிரதமரிடம் சனத் ஜெயசூர்யா முன்வைத்த கோரிக்கை

மகளிர் சுயசேமிப்பு

அத்தோடு, உடனடியாக புதுக்குடியிருப்பு காவல் நிலையம் சென்று குறித்த தாக்குதலுடன் தொடர்புடைய அந்த இளைஞர் குழுவை உடனடியாக கைது செய்யுமாறும் புதுக்குடியிருப்பு காவல்துறை பொறுப்பதிகாரியிடம் முறைப்பாடளித்துள்ளார்.

முல்லைத்தீவில் தலைக்கவசத்தால் இளைஞர்களினால் கொடூரமாக தாக்கப்பட்ட பெண்கள் | Drunk Youth Attacks Women In Mullaitivu

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு காவல் பிரிவிற்குட்பட்ட வள்ளிபுனம் பகுதியில் சட்டவிரோத போதைப்பொருள் விற்பனை உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடும் இளைஞர் குழுவால் தொடர்ந்தும் அப்பகுதி மக்கள் பல்வேறு இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

இந்தநிலையில் கடந்த இரண்டாம் திகதி அன்று மாலை வள்ளிபுனம் பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் அப்பகுதியைச் சேர்ந்த மகளிர் சுயசேமிப்பு கொத்தணி குழு ஒன்றினுடைய கூட்டமொன்று இடம்பெற்றுள்ளது.

அநுராதபுரத்தில் பல முக்கிய நிகழ்வுகளில் கலந்துகொண்ட இந்திய பிரதமர்

அநுராதபுரத்தில் பல முக்கிய நிகழ்வுகளில் கலந்துகொண்ட இந்திய பிரதமர்

சட்டவிரோத செயற்பாடு

இதன்போது அவ்வீட்டின் அருகே செல்லும் வீதியால் வருகை தந்த, அப்பகுதியில் சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடும் குறித்த இளைஞர்குழு, கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த பெண்களை தகாத வார்த்தையால் திட்டியதுடன், குறித்த கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த பெண்கள் சிலரை கடுமையாகத் தாக்கியுமுள்ளனர்.

அதிலும் குறிப்பாக தலைக்கவசத்தினால் ஒரு பெண்ணின் தலைப்பகுதி மிகக் கடுமையாகத் தாக்கப்பட்டதாகவும் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதுடன், தாக்குதலுக்கு பயன்படுத்திய தலைக்கவசமும் இதன்போது காண்பிக்கப்பட்டது.

முல்லைத்தீவில் தலைக்கவசத்தால் இளைஞர்களினால் கொடூரமாக தாக்கப்பட்ட பெண்கள் | Drunk Youth Attacks Women In Mullaitivu

இந்தநிலையில், இது தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண்களால் புதுக்குடியிருப்பு காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதற்கமைய, தாக்குதலுடன் தொடர்புடைய நால்வரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

எனினும், தாக்குதலுடன் தொடர்புடைய ஏனைய மூவர் இதுவரை கைது செய்யப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

லண்டனில் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட போலி பூசகர்: நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு

லண்டனில் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட போலி பூசகர்: நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு

அச்சுறுத்தல் நிலைமை

இதையடுத்து, சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரியவந்ததையடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இத்தாக்குதல் செயற்பாடுகளுடன் தொடர்புடைய ஏனைய மூவரையும் கைது செய்ய உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக புதுக்குடியிருப்பு நிலைய பொறுப்பதிகாரி துரைராசா ரவிகரனிடம் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவில் தலைக்கவசத்தால் இளைஞர்களினால் கொடூரமாக தாக்கப்பட்ட பெண்கள் | Drunk Youth Attacks Women In Mullaitivu

அத்தோடு, அப்பகுதியில் சட்டவிரோத செயற்பாட்டாளர்களால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் அச்சுறுத்தல் நிலைமைகளைக் கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுப்பதாகவும் காவல்துறை அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினருடன் இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் முப்புரம் வட்டார வேட்பாளர் சிவபாதம் குகநேசன் இணைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

மோடியை சந்தித்த மலையக தமிழ் அரசியல்வாதிகள்

மோடியை சந்தித்த மலையக தமிழ் அரசியல்வாதிகள்



You May Like This


  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   
GalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு

25 May, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் களபூமி, ஓட்டுமடம், யாழ்ப்பாணம், Markham, Canada

25 May, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

குருநாகல், ஜெயந்திநகர், மதுரை, தமிழ்நாடு, India, அனலைதீவு, கிளிநொச்சி

27 May, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Scarborough, Canada

24 May, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, சங்கத்தானை

07 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

06 Jun, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

26 May, 2021
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், பொகவந்தலாவை, London, United Kingdom

26 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆத்திமோட்டை, Hayes, United Kingdom

27 May, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Tooting, United Kingdom

27 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வல்வெட்டி, Ontario, Canada

05 Jun, 2024
மரண அறிவித்தல்

மாதகல், சுண்டிக்குளி, Nigeria, Toronto, Canada

25 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இறுப்பிட்டி, கொழும்பு, யாழ்ப்பாணம்

26 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரெழு, சிறுப்பிட்டி

26 May, 2017
மரண அறிவித்தல்

நாரந்தனை, பலெர்மோ, Italy, Brighton, United Kingdom

02 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Bremen, Germany

21 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

26 May, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Bremerhaven, Germany, Fribourg, Switzerland, Chennai, India

24 May, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

25 May, 2017
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020