மின்சார சபை கலைக்கப்பட்டது : நடைமுறைக்கு வரும் புதிய நிறுவனங்கள்
இலங்கை மின்சார சபை உத்தியோகபூர்வமாக கலைக்கப்பட்டு, அதன் பணிகள் மற்றும் பொறுப்புகள் இன்று (09) முதல் ஆறு தனித்தனி நிறுவனங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்சார சபையை மறுசீரமைக்கும் திட்டத்தின் கீழ், நேற்று (08) நள்ளிரவுடன் இலங்கை மின்சார சபை எனும் கட்டமைப்பு முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.
இதன் மூலம் 1969ஆம் ஆண்டின் 17ஆம் இலக்க இலங்கை மின்சார சபைச் சட்டம் இரத்து செய்யப்பட்டுள்ளதுடன், ஒரு நிறுவன அலகாக இலங்கை மின்சார சபை சட்டப்பூர்வமாக கலைக்கப்பட்டுள்ளது.
அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்
இந்தநிலையில், மின் உற்பத்தி, மின் கடத்துகை, விநியோகம் மற்றும் கட்டமைப்பு இயக்கம் ஆகிய பணிகள் 6 நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்படுவதுடன் இதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை எரிசக்தி அமைச்சர் ஏற்கனவே வெளியிட்டிருந்தார்.

இதேவேளை விருப்ப ஓய்வு திட்டத்தைத் (VRS) தெரிவு செய்யாத ஊழியர்கள் அனைவரும் இந்தப் புதிய ஆறு நிறுவனங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கான நியமனக் கடிதங்கள் நாளை (10) முதல் வழங்கப்படும் என மின்சார சபையின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் பொறியியலாளர் தம்மிக விமலரத்ன தெரிவித்தார்.
இந்த மறுசீரமைப்பு நடவடிக்கையினால் நாட்டில் மின் உற்பத்தி அல்லது மின் விநியோகத்தில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என உறுதி அளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |