கொழும்பு வெசாக் தான சாலையில் கோர விபத்து! சாரதி குறித்து காவல்துறை வெளியிட்ட தகவல்
புதிய இணைப்பு
கொழும்பு மீகொடவில் உள்ள ஹை லெவல் வீதியில் நேற்று (31) நள்ளிரவு முன்னொடுக்கப்பட்ட ரொட்டி தானசாலை அருகே காத்திருந்த மக்கள் கூட்டத்தின் மீது வாடகைக் கார் மோதியதில் ஆறு பேர் உயிரிழந்தனர் மற்றும் ஏழு பேர் படுகாயம் அடைந்தனர்.
இது தொடர்பான விசாரணையில் பிலியந்தலவில் வசிக்கும் ஒரு வாகன திருத்தும் தொழிலாளிதான் விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநர் என ஆரம்பகட்ட காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
அவர் மதுபோதையில் வாகனம் ஓட்டியபோது விபத்தை ஏற்படுத்தியுள்ளார். மேலும், விபத்துக்குப் பிறகு வாகனத்தை நிறுத்தாமல் ஓட்டிச் சென்று, வழியிலேயே கைவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.
கைது நடவடிக்கை
இருப்பினும், பெரும் முயற்சிக்குப் பிறகு, சந்தேகத்திற்குரிய அந்த ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் சாலைப் பாதுகாப்புப் பொறுப்பு பிரதி காவல்துறைத் தலைவர் டபிள்யூ.பி.ஜே. சேனதீரா இன்று (01) நடைபெற்ற ஊடக சந்திப்பில்,
ஓட்டுநரிடம் செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இல்லை என்றும், வாடகைக் காரின் வருமானச் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களும் காலாவதியாகிவிட்டன என்றும் உறுதிப்படுத்தினார்.
இந்தச் சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட ஓட்டுநர், மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு இன்று (01) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
அவர் மதுபோதையில் வாகனம் ஓட்டியபோது மக்கள் மீது மோதியதால், கொலைக் குற்றச்சாட்டுகள் உட்பட, குற்றவியல் சட்டத்தின் கீழ் அவர் மீது சுமத்தக்கூடிய அதிகபட்ச குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்வதில் காவல்துறை கவனம் செலுத்தி வருவதாக டிஐஜி வலியுறுத்தினார்.
மேலும், விபத்து நடந்த நேரத்தில் அந்த வாடகைக் காரின் உரிமையாளரும் அதில் பயணம் செய்ததாகவும், விபத்துக்குப் பிறகு அவரும் வாகனத்திலிருந்து இறங்கித் தப்பிச் சென்றதால், அவர் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.
முதலாம் இணைப்பு
தானசாலைக்காக வரிசையில் நின்றுகொண்டிருந்த மக்கள் கூட்டத்தின் மீது வாடகை கார் மோதியதில் ஆறு பேர் உயிரிழந்துள்ளந்த சம்பவம் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாப காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரான குறித்த சாரதி மதுபோதையில் இருந்தமை தற்போது உறுசெய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.
கொழும்பு - மீகொட பகுதியில் நேற்றிரவு (31.05.2026) இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணை
இந்த விபத்தில், காயமடைந்த சிறு குழந்தை உட்பட ஏழு பேர் ஹோமகம மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் நிலையில் மேலதிக விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

ஆரம்பகட்ட விசாரணைகளில் அவிசாவெல்ல பகுதியிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த குறித்த வாடகை கார் மக்கள் கூட்டத்தின் மீது மோதியதில், வரிசையிலிருந்த 15, 32 மற்றும் 56 வயதுடைய மூன்று பெண்களும், 35 மற்றும் 38 வயதுடைய மூன்று ஆண்களும் உயிரிழந்துள்ளமை உறுதிசெய்யப்பட்டது.
சம்பவம் தொடர்பில், காரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இவர் பிலியந்தலை பகுதியைச் சேர்ந்த 42 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அத்துடன், விபத்தில் காயமடைந்தவர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.பி.எல் போட்டியில் சரித்திரம் படைத்த வைபவ் சூர்யவன்ஷி - இந்திய அணியில் இடம் - பக்கத்தில் முக்கிய புள்ளி
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |