ஈஸ்டர் தாக்குதல் விசாரணையில் மைத்திரியை நோக்கி வீசப்பட்ட குற்றப்பார்சல்! திரும்பும் சட்டத்தின் கூர்முனை

Anura Kumara Dissanayaka Sri Lanka Law and Order
By Shalini Balachandran Aug 01, 2026 06:14 AM GMT
Report

2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கில் முன்னாள் காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு கடந்த ஜூலை 31ஆம் திகதி கொழும்பு மூவரடங்கிய மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்ததை அடுத்து இந்த தேசிய சோகத்தின் விசாரணை இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது.

அனைத்து சாட்சியங்களும் வாக்குமூலங்களும் தற்போது முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நோக்கியே திரும்பியுள்ளன.

268 அப்பாவி உயிர்களை பலிகொண்ட அந்த தாக்குதல் நடந்து 7 ஆண்டுகளுக்குப் பின், இறுதி பொறுப்பாளி யார் ? என்ற கேள்விக்கு விடை காணும் நிலைக்கு நீதித்துறை வந்துள்ளது.

2025 உயர்தரப் பரீட்சை : பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியானது

2025 உயர்தரப் பரீட்சை : பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியானது

2019 முதல் 2026 வரை நடந்த விசாரணைகளில் மைத்திரி மீது முன்வைக்கப்பட்ட முக்கிய குற்றச்சாட்டுகள் வருமாறு:

2021 ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அறிக்கையின் படி, 2018 ஒக்டோபர் முதல் தாக்குதல் நடந்த 2019 ஏப்ரல் வரை ஜனாதிபதி மைத்திரி தேசிய பாதுகாப்பு சபை கூட்டங்களை முறையாக கூட்டவில்லை.

இதனால் இந்திய புலனாய்வு அமைப்பு வழங்கிய முக்கிய எச்சரிக்கைகள் கூட்டாக ஆராயப்படவில்லை. அப்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பாதுகாப்பு கூட்டங்களுக்கு அழைக்காமல் தவிர்த்தமையும் நிர்வாகக் கோளாறு என ஆணைக்குழு கண்டித்தது.

ஈஸ்டர் தாக்குதல் விசாரணையில் மைத்திரியை நோக்கி வீசப்பட்ட குற்றப்பார்சல்! திரும்பும் சட்டத்தின் கூர்முனை | Easter Attack Case Focus Turns To Maithripala

தாக்குதலுக்கு 5 நாட்களுக்கு முன்னர் ஏப்ரல் 16ஆம் திகதி மைத்திரி தனிப்பட்ட பயணமாக சிங்கப்பூர் சென்றார்.

பாதுகாப்பு அமைச்சராகவும் இருந்த அவர், நாட்டை விட்டு வெளியேறும் போது பதில் அமைச்சரை நியமிக்கவில்லை. இது அரசியலமைப்புக்கு விரோதமான தேசிய பாதுகாப்பை அபாயத்தில் ஆழ்த்திய நிர்வாகப் பொறுப்பற்ற செயல் என 2021 ஆணைக்குழு அறிக்கை குறிப்பிடுகிறது. 

மைத்திரியின் உத்தரவால் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் வழக்கில் இருவர் மட்டுமே கைது! ஹேமசிறியின் பரபரப்பு வாக்குமூலம்

மைத்திரியின் உத்தரவால் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் வழக்கில் இருவர் மட்டுமே கைது! ஹேமசிறியின் பரபரப்பு வாக்குமூலம்

2023 ஜனவரி 12 உயர் நீதிமன்ற அடிப்படை உரிமை வழக்கு தீர்ப்பில் முக்கிய திருப்பம் ஏற்பட்டது. ஹேமசிறி பெர்னாண்டோவின் வாக்குமூலம்:

“ஏப்ரல் 20 மாலை 5:30 மணிக்கு நிலந்த ஜயவர்தன, ஏப்ரல் 21 தேவாலயங்கள் மீது தாக்குதல் நடக்கலாம் என தகவல் வழங்கினார்.

உடனடியாக சிங்கப்பூரில் இருந்த ஜனாதிபதி மைத்திரிக்கு வட்ஸ்அப் மூலம் தகவல் அனுப்பினேன். பதில் வரவில்லை.

இதையடுத்து உயர் நீதிமன்றம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாக்குதலை தடுக்கத் தவறி மக்களின் அடிப்படை உரிமையை மீறிவிட்டார் என தீர்ப்பளித்து அவருக்கு ரூபாய் 100 மில்லியன் நட்டஈடு விதித்தது.

ஈஸ்டர் தாக்குதல் விசாரணையில் மைத்திரியை நோக்கி வீசப்பட்ட குற்றப்பார்சல்! திரும்பும் சட்டத்தின் கூர்முனை | Easter Attack Case Focus Turns To Maithripala

மரண தண்டனை தீர்ப்புக்கு முன்னர் 2026 ஜூலையில் ஹேமசிறி பெர்னாண்டோ நீதிமன்றில் அளித்த வாக்குமூலம் மைத்திரி மீதான குற்றச்சாட்டை உச்சத்துக்கு கொண்டு சென்றது.

தாக்குதலின் பின்னர் மேலும் சிலரைக் கைது செய்ய சட்டமா அதிபர் பரிந்துரைத்தபோது மைத்திரி என்னிடம், பூஜித் ஜயசுந்தரவையும் உன்னையும் மட்டும் கைது செய்தால் போதும். மற்றவர்கள் வேண்டாம் என நேரடியாக உத்தரவிட்டார்.”

அதே வாக்குமூலத்தில் நிலந்த ஜயவர்தன உயிர்த்த தாக்குதலின் சதிகாரர்களில் ஒருவர். அவர் நேரடியாக ஜனாதிபதியின் கீழ் செயல்பட்டவர் எனவும் ஹேமசிறி குற்றம் சாட்டினார்.

வரலாற்றை மாற்றிய மரண தண்டனை: மகிழ்ச்சியின் உச்சத்தில் மைத்திரி - பாதுகாப்புச் செயலாளரின் வாக்குமூலம்

வரலாற்றை மாற்றிய மரண தண்டனை: மகிழ்ச்சியின் உச்சத்தில் மைத்திரி - பாதுகாப்புச் செயலாளரின் வாக்குமூலம்

புதிய விசாரணை

மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் தமது தீர்ப்பில் இந்த வாக்குமூலங்கள் புதிய விசாரணைக்கு வழிவகுக்கும் என பகிரங்கமாக குறிப்பிட்டுள்ளனர்.

சட்டத்தரணி ஒருவர் கருத்து தெரிவிக்கையில், "உயர் நீதிமன்றம் ஏற்கனவே சிவில் பொறுப்பை நிரூபித்துள்ளது. கடமை தவறுதல், நிர்வாக முறைகேடு, நீதிக்கு இடையூறு என குற்றவியல் விசாரணைக்கான அனைத்து அடிப்படைகளும் தற்போது தயாராக உள்ளன.

ஈஸ்டர் தாக்குதல் விசாரணையில் மைத்திரியை நோக்கி வீசப்பட்ட குற்றப்பார்சல்! திரும்பும் சட்டத்தின் கூர்முனை | Easter Attack Case Focus Turns To Maithripala

ஹேமசிறி, நிலந்த, CID என அனைத்து சாட்சியங்களும் ஜனாதிபதியின் முடிவு என்ற ஒரே புள்ளியில் குவிகின்றன" என தெரிவித்துள்ளார்.

268 உயிர்களின் இறுதி பொறுப்பாளி யார் என்ற கேள்விக்கு அரசியல் தலைமையின் பங்கு விசாரிக்கப்படாமல் நீதி முழுமையடையாது என்பதே பாதிக்கப்பட்ட குடும்பங்களினதும், சட்ட சமூகத்தினதும் ஒருமித்த குரலாக உள்ளது.

இந்தநிலையில் அடுத்த விசாரணை மைத்திரிபால சிறிசேனவை மையப்படுத்தியே இருக்கும் என்பது தெளிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஈரானுக்கு பேரிடி! மீண்டும் பாரிய தாக்குதலுக்கு தயாரான அமெரிக்கா - இஸ்ரேல்

ஈரானுக்கு பேரிடி! மீண்டும் பாரிய தாக்குதலுக்கு தயாரான அமெரிக்கா - இஸ்ரேல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, Berlin, Germany

11 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பிரித்தானியா, United Kingdom

01 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், சென்னை, India, Cergy, France

02 Aug, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், Gonesse, France

01 Aug, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுழிபுரம், கனடா, Canada

28 Jul, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

நவாலி வடக்கு, Montreal, Canada

28 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom, மெல்போன், Australia

29 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, நல்லூர், பரிஸ், France

01 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

12 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, புத்துவெட்டுவான், கிளிநொச்சி, Brampton, Canada

31 Jul, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை கிழக்கு, யாழ்ப்பாணம்

26 Jul, 2021
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025