பயங்கரவாதி சஹ்ரானின் வாகன விவகாரம்: புத்தருக்கே இழைக்கப்பட்ட குற்றம் என்கிறார் சரத் வீரசேகர
ஈஸ்டர் தாக்குதலை மேற்கொண்ட சஹ்ரான் ஹாசிமின் வாகனத்தை நான் பயன்டுத்துவதாக ஊடகங்களில் பரப்பப்படும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
சனல் 4 ஊடகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதற்கமைய, சஹ்ரான் ஹசிமின் வாகனத்தை சரத் வீரசேகர எப்படி பயன்படுத்த முடியும் என ஊடகவியலாளர் அவரிடம் கேள்வி எழுப்பினார்.
அந்த கேள்விக்கு பதிலளிக்கும் போதே சரத் வீரசேகர இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
போலியான குற்றச்சாட்டு
அவர் மேலும் தெரிவிக்கையில், குறித்த வாகனம் காவல்துறை விசேட அதிரடிப்படையின் வாகன பிரிவில் உள்ள வழக்குப் பொருளாகும்.
நான் அவ்வாறு ஒரு வாகனத்தையும் பயன்படுத்தவில்லை. வழக்குப் பொருளாக உள்ளதனை நான் எப்படி பயன்படுத்துவேன். வேண்டும் என்றால் காவல்துறை மா அதிபரிடம் கேட்டுப் பாருங்கள்.

சனல் 4 விவகாரம் பொய்யானதென நிரூபித்தக் கொண்டிருக்கும் போது இவ்வாறான போலியான குற்றச்சாட்டுகளை முன்வைத்து சேறு பூசும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
அதனை நான் முற்றிலுமான நிகராகரிக்கின்றேன். அந்த குற்றச்சாட்டில் எவ்வித உண்மையும் இல்லை.
புத்தருக்கே குற்றம்

எப்படியிருப்பினும் இந்த வாகனத்தை குற்ற விசாரணை பிரிவு அதிகாரிகள் பயன்படுத்த முடியும். அது அரசுடமையாக்கப்பட்டவைகளாகும்.
நான் நாட்டிற்காக தியாகம் செய்து ஒரு இடத்திற்கு வரும் போது இவ்வாறான குற்றச்சாட்டுகள் எழுந்தால் கண்டுக்கொள்ள முடியாது. புத்தருக்கே குற்றம் சுமத்தப்பட்டது. நான் இவற்றினை கண்டுக்கொள்ள மாட்டேன்” என தெரிவித்துள்ளார்.
காரைநகர் படகு தளத்தில் விழுந்த இந்தியாவின் மூலோபாய பார்வை 6 மணி நேரம் முன்
ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா!
5 நாட்கள் முன்