சாரா ஜஸ்மீனின் மதமாற்றத்தில் ராஸிக்கின் சதி! ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் வெளிவர காத்துக்கிடக்கும் சதிகள்
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலில் முக்கிய சூத்திரதாரியாக கருதப்படும் சாரா ஜஸ்மீன் என்கின்ற புலஸ்தினி மகேந்திரன் தொடர்பிலான கேள்விகள் தற்போது வலுத்துள்ளன.
சந்தேகநபரான சாராவை கடத்தி சென்று அவரை மதமாற்றம் செய்து, திருமணம் செய்துக்கொண்ட நபரும், நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய தேவாலயத்தில் தாக்குதலை மேற்கொண்டவரான ராஸிக் என்பவரும் ஒருவார் தான் என்பதை சில ஆதாரங்கள் மேற்கோள் காட்டுகின்றன.
முன்னதாக சாரா தொடர்பில் அவரது தாயார் கவிதா கூறிய விடயங்களும், நீர்கொழும்பு தாக்குதல்தாரி எவ்வாறு சாராவை மதம்மாற்றி இந்த கொடூர சம்பவத்துக்குள்ள உள்வாங்கியுள்ளனர் என்பதை மேலும் விளக்குகிறது.
இந்த ராஸிக் என்பவர் முன்னதாக இராணுவப்புலனாய்வு பிரிவில் நிதிகளை பெற்றுவந்ததாக அப்போதைய அரசாங்க அமைச்சர் ஒருவர் கூறிய விடயம் இதன் சதி திட்டங்களை மேலும் சந்தேகத்துக்குள்ளாக்குகிறது.
மேலும் தாக்குதலுக்கு முன்னதாக இராணுவப்புலனாய்வு அதிகாரி என்று கூறி சாராவை தோடி ஒருவர் வந்ததாக அவரது தாயார் கூறும் வியங்கள் உண்மையில் அவர் இராணுவ அதிகாரியா , அல்லது தாக்குதல்தாரியின் கையாற்களா என்பது தொடர்பில் விரிவாக ஆராய்கிறது இந்த காணொளி...
