உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் : ராஜபக்சவினர் மீது வலுக்கும் சந்தேகம்

Easter Attack Sri Lanka Sri Lanka Police Investigation
By Kirupa Nov 16, 2023 04:10 PM GMT
Report

அரசியல் ஆதாயத்தை பெற்றுக்கொள்ளும் நோக்குடன் சிறிலங்காவின் முன்னாள் ராஜபக்ச அரசாங்கத்தினர் பயங்கரவாத குழுவுடன் இணைந்து உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை மேற்கொண்டிருக்கலாம் என ஒய்வு பெற்ற காவல்துறை அதிகாரியொருவர் தெரிவித்த கருத்து பேசுபொருளாகியுள்ளது.

அவுஸ்திரேலியாவின் ஏ.பி.சி ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில் கருத்து வெளியிட்ட முன்னாள் பிரதி காவல்துறை மா அதிபர் ரவி செனவிரத்ன, இஸ்லாமிய அரசு இயக்கத்தினரால் ஈர்க்கப்பட்டவர்களால் தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர வீடுகளை இலக்குவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களில் இரண்டு அவுஸ்திரேலியர்கள் உட்பட 269 பேர் பலியாகியதுடன், சுமார் 500 பேர் காயமடைந்திருந்தனர்.

சர்வதேச விசாரணைக்கான கோரிக்கை

இந்தச் சம்பவம் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என கொழும்பு மறைமாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையுடன் கிங்ஸ்பெரி விடுதி மீதான தாக்குதலில் உயிர்தப்பிய சத்துடில்லா வீரசிங்க என்பவரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் : ராஜபக்சவினர் மீது வலுக்கும் சந்தேகம் | Easter Sunday Attacks Suspicions Rajapaksa Team

இந்த தாக்குதலுடன் ராஜபக்ஸவினர் தொடர்புபட்டுள்ளதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக சுதந்திரமான விசாரணைகளுக்கு ஆதரவளிக்குமாறு அவுஸ்திரேலிய அரசாங்கத்திடம் சத்துடில்லா வீரசிங்க வலியுறுத்தியுள்ளார்.

ஒரே நேரத்தில் ஒருங்கிணைக்கப்பட்ட வகையில் பல குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும் இதுவொரு பாரிய திட்டமிட்ட நடவடிக்கையாக இருக்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பொய்த்துப்போன ரணிலின் நம்பிக்கை : வரவு செலவுத் திட்டத்தில் பாரிய ஊழல்களாம்

பொய்த்துப்போன ரணிலின் நம்பிக்கை : வரவு செலவுத் திட்டத்தில் பாரிய ஊழல்களாம்

காரணமின்றி பதவி நீக்கப்பட்ட விசாரணை அதிகாரிகள்

இந்த நிலையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில் முதல் முறையாக பகிரங்கப்படுத்தியுள்ள முன்னாள் பிரதி காவல்துறை மா அதிபர் ரவி செனவிரத்ன, அரசியல் தலையீடுகள் காரணமாக காவல்துறையினரின் விசாரணைகளில் தடம்புரள்வுகள் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் : ராஜபக்சவினர் மீது வலுக்கும் சந்தேகம் | Easter Sunday Attacks Suspicions Rajapaksa Team

புதிய அரசாங்கம் பதவியேற்றவுடன் எந்தவொரு விளக்கமும் இன்றி தாம் தலைமையிலான விசாரணையாளர்கள் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில் இருந்து நீக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

குறிப்பாக பிரதமரோ அமைச்சரவை அமைச்சர்களோ நியமிக்கப்படுவதற்கு முன்னர் தமது விசாரணைகளை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் முன்னாள் பிரதி காவல்துறை மா அதிபர் ரவி செனவிரத்ன குறிப்பிட்டுள்ளார்.

தம்மை தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டுவந்த மேலும் 22 அதிகாரிகள் உயிர்த்த ஞாயிறு விசாரணைகளில் இருந்து நீக்கப்பட்டதாகவும் குறித்த அதிகாரிகளின் இடமாற்றங்கள் தொடர்பாக எந்தவொரு காரணமும் கூறப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

28ஆண்டுகளாக சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கை

28ஆண்டுகளாக சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கை

ராஜபக்சவினர் பதவியேற்க முன்னர் அதிகாரிகளுக்கு பயணத் தடை

தமது தலைமையின் கீழான 700 ற்கும் மேற்பட்ட குற்றவியல் விசாரணை திணைக்களத்தின் அதிகாரிகளுக்கு பதவியேற்கவிருந்த அரசாங்கம் வெளிநாட்டுப் பயணத் தடையை விதித்ததாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் : ராஜபக்சவினர் மீது வலுக்கும் சந்தேகம் | Easter Sunday Attacks Suspicions Rajapaksa Team

ராஜபக்ஸ ஆட்சியாளர்களுக்கு நெருக்கமானவர்களை விசாரணை செய்யும் காவல்துறையினரை அச்சுறுத்தும் முயற்சியாகவே இந்தப் பயணத்தை பார்க்கப்பட்டதாகவும் ரவி செனவிரத்ன குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் பயணத் தடையானது, மிகவும் சட்டவிரோதமானது எனவும் அவர் கூறியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் தொடர்பாக 90 ற்கும் மேற்பட்டவர்களுக்கு எதிராக காவல்துறையினர் குற்றச்சாட்டுக்களை பதிவு செய்துள்ளதாக கூறியுள்ள ரவி செனவிரத்ன, முஸ்லீம் குழுவுடன் சில புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தொடர்புகளை பேணியமை கண்டறியப்பட்டதை அடுத்து விசாரணையாளர்களுக்கு தடைகள் ஏற்படுத்தப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பூமிக்கு வரப்போகும் சந்திரயான்-3 இன் ஒரு பகுதி: இஸ்ரோ வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

பூமிக்கு வரப்போகும் சந்திரயான்-3 இன் ஒரு பகுதி: இஸ்ரோ வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

அமெரிக்காவின் உதவியுடன் கண்டுபிடிக்கப்பட்ட இரகசியம்

அமெரிக்க மத்திய புலனாய்வு பிரிவினரின் விசாரணைகளின் உதவியுடன் இந்த தொடர்புகள் கண்டறியப்பட்டதாகவும் இரகசிய இராணுவ புலனாய்வு நடவடிக்கை பிரிவினரால் பயன்படுத்தப்படும் இணைய வழி முகவரி ஊடாக தேசிய தெஹ்கீத் ஜமாத் பயங்கரவாதிகளுடன் அடிக்கடி தொடர்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் : ராஜபக்சவினர் மீது வலுக்கும் சந்தேகம் | Easter Sunday Attacks Suspicions Rajapaksa Team

தாக்குதல் நடத்தப்பட்ட ஒன்று காலை தற்கொலை படை தீவிரவாதிகளின் வீட்டிற்கு இராணுவ புலனாய்வு அதிகாரிகள் சென்ற போதிலும் இந்த தகவல் காவல்துறையினருடன் பகிர்ந்துகொள்ளப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தகைய சந்தர்ப்பங்களில், சில தனிநபர்கள் மற்றும் குழுக்களை தாம் விசாரணைக்கு உட்படுத்த முயன்ற போது சில தடைகளை எதிர்கொண்டதாகவும் ரவி செனவிரத்ன கூறியுள்ளார்.

காசாவிற்கு மற்றுமொரு சிக்கல்: மேலும் அவதியுறும் பொதுமக்கள்

காசாவிற்கு மற்றுமொரு சிக்கல்: மேலும் அவதியுறும் பொதுமக்கள்

தவறான தகவல்களை வழங்கிய இராணுவ புலனாய்வு பிரிவினர்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இடம்பெறுவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்னர் கிழக்கில் இரண்டு காவல்துறை உத்தியோகத்தர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தௌவ்ஹீத் ஜமாத் அமைப்பினருக்குள்ள தொடர்புகளை மறைத்து, காவல்துறையினருக்கு தவறான தகவல்களை இராணுவ புலனாய்வு பிரிவினர் காவல்துறையினருக்கு வழங்கியதாகவும் முன்னாள் பிரதி காவல்துறை மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் : ராஜபக்சவினர் மீது வலுக்கும் சந்தேகம் | Easter Sunday Attacks Suspicions Rajapaksa Team

உளவுத்துறை தொடர்பான ரகசிய விஷயங்களை தமது அதிகாரிகள் கையாள்வதாக இராணுவ உளவுத்துறையினர் தமக்கு தெரிவித்ததால் தாம் அவர்களை மேலும் விசாரிக்கவில்லை எனவும் ரவி செனவிரத்ன மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Brampton, Canada

02 Apr, 2025
மரண அறிவித்தல்

முனைத்தீவு, New Jersey, United States

02 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

11 Mar, 2025
மரண அறிவித்தல்

Euskirchen, Germany, Coventry, United Kingdom

01 Apr, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 7ம் வட்டாரம், Newmarket, Canada

07 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Pontoise, France

05 Apr, 2025
மரண அறிவித்தல்

நவிண்டில், சுழிபுரம், London, United Kingdom

27 Mar, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், Bad Marienberg, Germany, Hayes, United Kingdom

31 Mar, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, London, United Kingdom

08 Apr, 2022
மரண அறிவித்தல்

கரையூர், பருத்தித்துறை

07 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடி, கொக்குவில் கிழக்கு

08 Apr, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், கொழும்பு, வவுனியா

06 Apr, 2025
மரண அறிவித்தல்

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Witten, Germany

08 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், வண்ணார்பண்ணை

23 Mar, 2025
மரண அறிவித்தல்

இறக்குவானை, கந்தர்மடம், யாழ்ப்பாணம்

07 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி

07 Apr, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

11 Apr, 2022
மரண அறிவித்தல்

தாவடி, கொழும்பு, Toronto, Canada

03 Apr, 2025
மரண அறிவித்தல்

London, United Kingdom, Hayling Island, United Kingdom

19 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
கண்ணீர் அஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொழும்பு

05 Apr, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Muscat, Oman, Toronto, Canada

05 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Scarborough, Canada

05 Apr, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Neuilly-sur-Marne, France

18 Mar, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Le Bourget, France

04 Apr, 2020
13ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012