ஜனாதிபதி செயலகத்தின் முன் வெடித்த மற்றுமொரு போராட்டம்!
நாட்டின் பல்வேறு பகுதிகளிலுள்ள தேசிய பாடசாலைகளின் கல்வி மற்றும் கல்விசாரா ஊழியர்களைக் கொண்ட 'தேசிய பாடசாலை ஆசிரியர் - பிள்ளை ஒன்றியம்' கொழும்பில் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தது.
ஜனாதிபதி செயலகத்தின் பிரதான நுழைவாயிலுக்கு அருகில் இன்று (05) காலை குறித்த போராட்டம் ஆரம்பமானது.
தேசிய பாடசாலைகளில் 3 வருட சேவையை பூர்த்தி செய்த கல்வி மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கு, தமது பிள்ளைகளை அதே பாடசாலைகளில் சேர்த்துக்கொள்வதற்கான சலுகை எவ்வித காரணமும் தெரிவிக்கப்படாமல் 2025 ஆம் ஆண்டு முதல் நிறுத்தப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
தீர்வு வழங்கப்படவில்லை
இது தொடர்பாக பிரதமர் ஹரிணி அமரசூரிய, கல்வி அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட உரிய அதிகாரிகளைச் சந்தித்து வினவிய போதிலும் தமக்குத் தீர்வு வழங்கப்படவில்லை என போராட்டக்காரர்கள் சுட்டிக்காட்டினர்.

இவ்வாறானதொரு பின்னணியில், தமது பிரச்சினைக்கு எழுத்துப்பூர்வமான தீர்வை வலியுறுத்தி தேசிய பாடசாலை ஆசிரியர் - பிள்ளை ஒன்றியம் இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டது.
இப்போராட்டத்தில் தேசிய பாடசாலைகளின் ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்கள் மற்றும் பிள்ளைகள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |